18/04/2015 இன்று இரவு 9.00 மணியளவில் டேரா துபாய் தமிழ் பஜாரில் அமைந்துள்ள த.மு.மு.க துபாய் மண்டல மர்க்கசில் வளைகுடாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு இருக்கும் மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரும் தமிழ்நாடு முஸ்லிம்
முன்னேற்றக் கழகத்தின் மூத்த தலைவருமாகிய பேராசிரியர் M.H.ஜவாஹிருல்லாஹ்
அவர்கள் த.மு.மு.க துபாய் மண்டல மர்க்கசில் நடைபெற்ற சமுதாய விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்புரை நிகழ்த்தினார்.
இந்நிகழ்ச்சியில் அமீரகத்தில் இருக்கும் த.மு.முக.கிளைகளின் சார்பாக தர்பியத் நிகழ்ச்சியும் பொதுமக்களுக்கான கேள்விபதில் நிகழ்ச்சியும் நடைபெற்றது. சமுதாய மக்களுக்கு மார்க்க ரீதியான உபதேசமும் நடைபெற்றது. மார்க்கம் மற்றும் சமுதாய அரசியல் ரீதியான கேள்விகளுக்கும் பேராசிரியர் M.H.ஜவாஹிருல்லாஹ் பதிலளித்தார்.
இந்நிகழ்ச்சியில் அமீரகத்தின் த.மு.மு.க.தலைவர் அதிரை அப்துல் ஹாதி, துபாய் மண்டலத்தின் த.மு.மு.க.தலைவர் சகோதரர் A.S.இப்ராஹீம் மண்டலத்தின் செயலாளர் சகோதரர் அதிரை S.M.A. அப்துல் ஹமீது மண்டலத்தின் பொருளாளர் சகோதரர் அய்யம்பேட்டை முகம்மது பாரூக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்திற்கு பொதுமக்களும் த.மு.மு.க. ம.ம.க. உறுப்பினர்களும் பெரும்திரளாக கலந்து கொண்டு சிறப்பித்து வைத்தனர். கூட்டத்தில் அதிரை நியூஸ் அமீரக செய்தியாளர் நூவன்னா என்கிற நூர்முகம்மது பேராசிரியர் M.H. ஜவாஹிருல்லாஹ்வை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.
தகவல் மற்றும் புகைப்படங்கள்:
துபாயிலிருந்து நூர் முகம்மது [ நூவன்னா ]
இந்நிகழ்ச்சியில் அமீரகத்தில் இருக்கும் த.மு.முக.கிளைகளின் சார்பாக தர்பியத் நிகழ்ச்சியும் பொதுமக்களுக்கான கேள்விபதில் நிகழ்ச்சியும் நடைபெற்றது. சமுதாய மக்களுக்கு மார்க்க ரீதியான உபதேசமும் நடைபெற்றது. மார்க்கம் மற்றும் சமுதாய அரசியல் ரீதியான கேள்விகளுக்கும் பேராசிரியர் M.H.ஜவாஹிருல்லாஹ் பதிலளித்தார்.
இந்நிகழ்ச்சியில் அமீரகத்தின் த.மு.மு.க.தலைவர் அதிரை அப்துல் ஹாதி, துபாய் மண்டலத்தின் த.மு.மு.க.தலைவர் சகோதரர் A.S.இப்ராஹீம் மண்டலத்தின் செயலாளர் சகோதரர் அதிரை S.M.A. அப்துல் ஹமீது மண்டலத்தின் பொருளாளர் சகோதரர் அய்யம்பேட்டை முகம்மது பாரூக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்திற்கு பொதுமக்களும் த.மு.மு.க. ம.ம.க. உறுப்பினர்களும் பெரும்திரளாக கலந்து கொண்டு சிறப்பித்து வைத்தனர். கூட்டத்தில் அதிரை நியூஸ் அமீரக செய்தியாளர் நூவன்னா என்கிற நூர்முகம்மது பேராசிரியர் M.H. ஜவாஹிருல்லாஹ்வை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.
தகவல் மற்றும் புகைப்படங்கள்:
துபாயிலிருந்து நூர் முகம்மது [ நூவன்னா ]
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.