மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படும் இந்த பகுதியில் இயங்கும் தனியார் பள்ளியில் ஏராளமான குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர். மேலும் வாகன போக்குவரத்தும் எந்நேரமும் இருந்து வரும் நிலையில் இன்று காலை வி.கே.எம் ஸ்டோர் அருகே உள்ள மின்கம்பத்தின் மின் கம்பி திடீரென கீழே அறுந்து சாலையின் குறுக்கே விழுந்தது.
தகவலறிந்த அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் கே.எம்.ஏ ஜமால் அதிரை மின்சார வாரிய அலுவலர்களை தொடர்பு கொண்டு தெரியப்படுத்தியதை அடுத்து மின்சார வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அறுந்து விழுந்து கிடந்த மின்கம்பியை சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.
சரியான நேரத்தில் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதால் இப்பகுதியில் ஏற்பட இருந்து பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteஇன்று காலை பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
அதிரை பேரூர் ஆட்சியாக இருக்கட்டும், அதிரை மின்சார வாரியமாக இருக்கட்டும். இந்தப் பகுதியைப் பொறுத்தவரை நல்ல வசூல், ஆனால் எந்நேரமும் இந்தப் பகுதிதான் எல்லா வற்றிலும் புறகனிக்கப்படுகிறது. இந்தப் பகுதிக்கு எந்த சலுகையும் கிடையாது, ஆனாலும் இப்பகுதி மக்கள் தவறாமல் வரிகளையும், கட்டணங்களையும் சரியாக செலுத்தி வருகின்றனர்.
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது.
த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.