.

Pages

Thursday, April 23, 2015

சிஎம்பி லேன் தனியார் பள்ளி பிராதான சாலையின் குறுக்கே மின்கம்பி அறுந்து விழுந்தது: பெரும் விபத்து தவிர்ப்பு !

அதிரை சிஎம்பி லேன் பகுதியின் பிராதன நான்கு வழிச்சாலையின் குறுக்கே மின்கம்பி அறுந்து விழுந்ததால் அப்பகுதியில் ஏற்பட இருந்த பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படும் இந்த பகுதியில் இயங்கும் தனியார் பள்ளியில் ஏராளமான குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர். மேலும் வாகன போக்குவரத்தும் எந்நேரமும் இருந்து வரும் நிலையில் இன்று காலை வி.கே.எம் ஸ்டோர் அருகே உள்ள மின்கம்பத்தின் மின் கம்பி திடீரென கீழே அறுந்து சாலையின் குறுக்கே விழுந்தது.

தகவலறிந்த அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் கே.எம்.ஏ ஜமால் அதிரை மின்சார வாரிய அலுவலர்களை தொடர்பு கொண்டு தெரியப்படுத்தியதை அடுத்து மின்சார வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அறுந்து விழுந்து கிடந்த மின்கம்பியை சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.

சரியான நேரத்தில் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதால் இப்பகுதியில் ஏற்பட இருந்து பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

1 comment:

  1. பதிவுக்கு நன்றி.

    இன்று காலை பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

    அதிரை பேரூர் ஆட்சியாக இருக்கட்டும், அதிரை மின்சார வாரியமாக இருக்கட்டும். இந்தப் பகுதியைப் பொறுத்தவரை நல்ல வசூல், ஆனால் எந்நேரமும் இந்தப் பகுதிதான் எல்லா வற்றிலும் புறகனிக்கப்படுகிறது. இந்தப் பகுதிக்கு எந்த சலுகையும் கிடையாது, ஆனாலும் இப்பகுதி மக்கள் தவறாமல் வரிகளையும், கட்டணங்களையும் சரியாக செலுத்தி வருகின்றனர்.

    இப்படிக்கு.
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது.
    த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.