.

Pages

Friday, April 24, 2015

அதிரை இளைஞரை கடத்திய கும்பல் கைது !

தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் தஞ்சை மாவட்ட பொருளாளராக பொறுப்பு வகிப்பவர் லெ.மு.செ அஹமது ஹாஜா, இவர் கடந்த [ 20-04-2015 ] அன்று இரவு பட்டுக்கோட்டையில் இருந்து ஆட்டோ வாகனத்தில் ஊர் திரும்பிகொண்டிருந்தார். இவருடன் தமுமுக நகர பொருளாளர் செய்யது முஹம்மது புஹாரி, துணைச் செயலாளர் தமீம் அன்சாரி மற்றும் நடுத்தெருவை சேர்ந்த ராஜிக் ( வயது 32 ) ஆகியோர் வாகனத்தில் இருந்தனர். வாகனம் கரிக்காடு அருகே வந்தபோது 15 பேர்கள் கொண்ட கும்பல் ஆட்டோ வாகனத்தை வழிமறித்து தாக்கிவிட்டு வாகனத்தில் இருந்த ராஜிக்கை வலுக்கட்டாயமாக கடத்தி சென்றனர். கும்பல் தாக்கியதில் அஹமது ஹாஜாவுக்கு காயம் ஏற்பட்டது. உடனடியாக பட்டுக்கோட்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து தமுமுக தஞ்சை மாவட்ட பொருளாளர் லெ.மு.செ அகமது ஹாஜா பட்டுக்கோட்டை நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் ஆள் கடத்தல் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையில், செவ்வாய்க்கிழமை (ஏப். 21) காலை பரக்கலக்கோட்டை கிராமத்தில் ராஜிக் அகமதுவை கடத்தல் கும்பல் விடுவித்து விட்டு தப்பிச் சென்றது.

கடத்தி சென்ற கும்பலை போலீஸார் தீவிரமாக தேடி வந்த நிலையில், அணைக்காடு கிராமத்தைச் சேர்ந்த எஸ். ஜேம்ஸ் (46), ஆர். ரெக்ஸ் ஆரோக்கியராஜ் (26), ஏ. நியூட்டன் (24), ஏ. ஆப்ரகாம் அந்தோணிராஜ் (21), பி. ரோமியோ ஜெயப்பிரகாஷ் (36) ஆகிய ஐந்து பேரையும் வியாழக்கிழமை (ஏப்.23) காலை வெண்டாக்கோட்டை நசுவினி ஆற்றுப் பாலம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற போது போலீஸார் கைது செய்தனர். ஆள் கடத்தலுக்கு அவர்கள் பயன்படுத்திய 4 மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.