.

Pages

Monday, April 27, 2015

அதிரை அரசு மருத்துவமனை இரவு நேர சிகிச்சை இல்லாததால் கடும் அவதி !

அதிரை அரசு மருத்துவமனையில் இரவுநேரத்தில் சிகிச்சை அளிக்க டாக்டர்களை நியமனம் செய்ய வேண்டும், என்று கோரிக்கை எழுந்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய கடலோரக் கிராமங்களிலும், தேர்வு நிலை டவுன் பஞ்சாயத்துக்களிலும் அதிரையும் ஒன்று. 75 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர்.இவர்களில், பெரும்பாலானவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். ஓரளவு விவசாயமும் நடக்கிறது.

அதிரையில் உள்ள கிழக்கு கடற்கரை சாலை, அப்பகுதி மக்களுக்கு ஒருவகையில் போக்குவரத்துக்கு பயனளிப்பதாக இருந்தாலும், மற்றொரு வகையில் உயிரிழப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த சாலையில் அசுர வேகத்தில் செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றன. பெரும்பாலும் இரவு நேரங்களில், இரு சக்கர வாகனங்களில் செல்வோர் விபத்துக்குள்ளாகி வருகின்றனர்.விபத்தில் சிக்கியவர்களை மீட்டு, அதிரை அரசு மருத்துவமனையில் சேர்த்தால், அங்கு சிகிச்சை அளிக்க டாக்டர்கள் இருப்பதில்லை. தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரிக்கு கொண்டு செல்வதற்கு, ஒரு மணி நேரம் வரை தாமதமாவதால், விபத்துக்குள்ளானவர்கள் வழியிலேயே உயிரிழக்கும் பரிதாப சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. இந்த நிகழ்வுகளை தவிர்க்கும், விதமாக அதிரை அரசு மருத்துவமனையை பொது மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும்.இரவு நேரத்தில் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை அளிக்க டாக்டர்கள், நர்ஸ்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களை நியமனம் செய்ய வேண்டும், என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இது குறித்து அதிரை டவுன் பஞ்சாயத்தில் தீர்மானம் நிறைவேற்றி, அரசுக்கும் அனுப்பபட்டுள்ளது. மருத்துவமனை விரிவாக்க பணிகளுக்கு பங்களிப்பு தொகை செலுத்தவும் தயாராக உள்ளதாக, அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.அரசு நடவடிக்கை எடுத்து, மக்கள் பங்களிப்புடன் அதிரை அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தி, 24 மணி நேரமும் டாக்டர்களை பணியமர்த்த நடவடிக்கை எடுக்கலாமே !

நன்றி:தினமலர்

2 comments:

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.