.

Pages

Wednesday, April 29, 2015

அதிரையில் தக்காளி மீன்கள் விற்பனை ! [ படங்கள் இணைப்பு ]

அதிரையை உள்ளடக்கிய காந்தி நகர், கரையூர் தெரு, ஏரிப்புறக்கரை மறவக்காடு, கீழத்தோட்டம் ஆகிய பகுதிகளில் மீன்பிடி துறைமுகங்கள் உள்ளன. இங்குள்ள மீனவர்கள் படகுகளில் கடலுக்குச் சென்று மீன்பிடித்து உள்ளூர் மீன் மார்கெட்டிற்கு விற்பனைக்காக கொண்டு வரப்படும்.

தமிழகத்தில் மீன் பிடி தடைகாலம் அமலில் இருந்து வருவதால் விசை படகுகள் மூலம் கடலுக்கு சென்று மீன்பிடிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. தற்போது நாட்டு படகுகள், தூண்டில் மூலம் மீன் பிடிக்கப்பட்டு வருகிறது. எனினும் மீன் வரத்து குறைவாகவே காணப்படுகிறது.

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் அருகே உள்ள கடலோரக்கிராமத்தில் தூண்டில் மூலம் பிடிக்கப்பட்ட சிகப்பு கலவாய் மீன்கள் அதிரை கடைத்தெரு மீன் மார்க்கெட்டிற்கு விற்பனைக்காக கொண்டு வரப்பட்டது. சிகப்பு நிறத்தில் காணப்படுவதால் 'தக்காளி மீன்' என்ற பெயரில் உள்ளூர் வியாபாரிகள் அழைத்து வருகின்றனர். வளைகுடா நாடுகளில் இந்த வகை மீன்களை 'ஹம்ரூ'  ( இன வகையை சார்ந்தது ) என்ற பெயரில் அழைப்பது உண்டு.

கிலோ ₹ 300 வரை விற்பனையானது. மீன் வியாபாரிகள் மொத்தமாக இவற்றை வாங்கிச்சென்றனர். மீன் வாங்கிச் செல்ல வந்த வாடிக்கையாளர்கள் சிகப்பு கலவாய் மீன்களை ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.
 

1 comment:

  1. பதிவுக்கு நன்றி.

    இந்த மீனை யாராவது சமைத்து சாப்பிட்ட அனுபவம் உண்டா?.

    இப்படிக்கு.
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது.
    த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.