தஞ்சாவூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ரூ. 30.40 கோடியில் கட்டப்பட்டு வந்த புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பணிகள் முடிந்து திறப்பு விழாவுக்கு தயாராக உள்ளது.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஆற்றுப்பாலம் அருகேயுள்ள நீதிமன்றத்துக்கு எதிரே உள்ள பழமையான கட்டடத்தில் கடந்த 120 ஆண்டுகளுக்கு மேலாக செயல்படுகிறது. இங்கு இடநெருக்கடி ஏற்பட்டதன் காரணமாக கடந்த 2012-ல் தஞ்சாவூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்குச் சொந்தமான இடத்தில், 61.42 ஏக்கரில் ரூ. 25 கோடியில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா கட்டுமானப்பணிகளையும் காணொலிக் காட்சிமூலம் தொடங்கி வைத்தார். கடந்த இரண்டரை ஆண்டுகளாக நடைபெற்ற வந்த பணி நிறைவுற்றுள்ளது. மொத்தம் 2.10 லட்சம் சதுரடியில் தரைதளம் மற்றும் 3 தளங்களாக புதிய ஆட்சியர் அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 34 அரசுத்துறை அலுவலகங்கள் அமைக்கும் வகையில் அறைகள் கட்டப்பட்டுள்ளது. முதலில் ரூ. 25 கோடியில் கட்டடம் கட்டும் பணி தொடங்கப்பட்டது. பின்னர் கூடுதலாக ரூ.5.40 கோடி ஒதுக்கப்பட்டு பணி நடைபெற்றுள்ளன. தற்போது கட்டடப்பணிகள் நிறைவுற்று, புதிய ஆட்சியர் அலுவலகம் திறப்பு விழாவுக்கு தயாராகி உள்ளது.
இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், தஞ்சாவூர் புதிய ஆட்சியர் அலுவலக கட்டடம் கட்டும் பணிகள் 98 சதம் நிறைவு பெற்றுவிட்டது. சிறிய பணிகள் மட்டுமே உள்ளது. ஆனால் கட்டடத்தின் திறப்பு விழாவை அரசு எப்போது அறிவித்தாலும், அதற்கு தகுந்தாற்போல் மாவட்ட நிர்வாகத்திடம் கட்டடத்தை ஒப்படைக்க தயாராக உள்ளோம் என்றனர்.
படங்கள்: பாஸ்கர்
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஆற்றுப்பாலம் அருகேயுள்ள நீதிமன்றத்துக்கு எதிரே உள்ள பழமையான கட்டடத்தில் கடந்த 120 ஆண்டுகளுக்கு மேலாக செயல்படுகிறது. இங்கு இடநெருக்கடி ஏற்பட்டதன் காரணமாக கடந்த 2012-ல் தஞ்சாவூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்குச் சொந்தமான இடத்தில், 61.42 ஏக்கரில் ரூ. 25 கோடியில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா கட்டுமானப்பணிகளையும் காணொலிக் காட்சிமூலம் தொடங்கி வைத்தார். கடந்த இரண்டரை ஆண்டுகளாக நடைபெற்ற வந்த பணி நிறைவுற்றுள்ளது. மொத்தம் 2.10 லட்சம் சதுரடியில் தரைதளம் மற்றும் 3 தளங்களாக புதிய ஆட்சியர் அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 34 அரசுத்துறை அலுவலகங்கள் அமைக்கும் வகையில் அறைகள் கட்டப்பட்டுள்ளது. முதலில் ரூ. 25 கோடியில் கட்டடம் கட்டும் பணி தொடங்கப்பட்டது. பின்னர் கூடுதலாக ரூ.5.40 கோடி ஒதுக்கப்பட்டு பணி நடைபெற்றுள்ளன. தற்போது கட்டடப்பணிகள் நிறைவுற்று, புதிய ஆட்சியர் அலுவலகம் திறப்பு விழாவுக்கு தயாராகி உள்ளது.
இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், தஞ்சாவூர் புதிய ஆட்சியர் அலுவலக கட்டடம் கட்டும் பணிகள் 98 சதம் நிறைவு பெற்றுவிட்டது. சிறிய பணிகள் மட்டுமே உள்ளது. ஆனால் கட்டடத்தின் திறப்பு விழாவை அரசு எப்போது அறிவித்தாலும், அதற்கு தகுந்தாற்போல் மாவட்ட நிர்வாகத்திடம் கட்டடத்தை ஒப்படைக்க தயாராக உள்ளோம் என்றனர்.
படங்கள்: பாஸ்கர்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.