.

Pages

Wednesday, April 29, 2015

அதிரை பேருந்து நிலையம் - பட்டுக்கோட்டை சாலையில் புதிதாக வாகன வேகத்தடுப்புகள் !

தமிழக அரசின் நெடுஞ்சாலை துறை சார்பில் அதிரை பேருந்து நிலையத்திலிருந்து சேர்மன்வாடி வழியாக பட்டுக்கோட்டை செல்லும் சாலையை 800 மீட்டர் தூரத்தில், 7 மீட்டர் அகலத்தில் மேம்படுத்தும் விதத்தில் சுமார்  ₹ 1.50 கோடி மதிப்பீட்டில் புதிதாக தார் சாலை போடப்பட்டது.

இந்த சாலையை ஒட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியும்,(  1 ம் நம்பர் ) தொடக்கப்பள்ளியும் ( 2 ம் நம்பர் )  உள்ளது. இந்த பள்ளிகளில் சுமார் 800 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பகுதியில் நிகழும் விபத்துகளை தவிர்க்க வாகன வேகத்தடுப்பு அமைக்க அதிரை நகர அதிமுக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழக அரசின் நெடுஞ்சாலைதுறை சார்பில் 1 ம் நம்பர்,  2 ம் நம்பர் பள்ளி அருகிலும், பொதுமக்கள் அதிகமாக கூடும் சேர்மன் வாடி பகுதி ஆகிய இரண்டு இடங்களில் வாகன வேகத்தடுப்பு அமைக்கப்பட்டு வருகிறது.

இந்த பணிகளை அதிரை பேரூராட்சி துணை தலைவர் பிச்சை, அதிரை நகர கூட்டுறவு வங்கி துணை தலைவர் முஹம்மது தமீம், வார்டு கவுன்சிலர் சிவக்குமார், தக்வா பள்ளி டிரஸ்டி உறுப்பினர் ஹாஜா பகுருதீன் ஆகியோர் பார்வையிட்டனர்.
 
 

1 comment:

  1. பதிவுக்கு நன்றி.

    பூப் போல வேகத்தடை, அழகான வேகத்தடை, தாலாட்டும் வேகத்தடை, தந்தி அடிக்காத வேகத்தடை, இருமல் வராத வேகத்தடை, புளிச்ச ஏப்பம் வராத வேகத்தடை.

    வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.

    இப்படிக்கு.
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது.
    த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.