அமெரிக்கா செல்வதற்காக போலி சான்றிதழ்கள் மூலம் விசா வாங்க முயன்ற தெலுங்கானாவை சேர்ந்தவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
தெலுங்கானா மாநிலம், நிஷாமாபாத் மாவட்டத்தில் வசித்து வருபவர் அலதி ரமேஷ் (வயது 31). அமெரிக்கா செல்வதற்காக திட்டமிட்டிருந்த ரமேஷ் விசா பெறுவதற்கு சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் விண்ணப்பத்திருந்தார்.
இந்நிலையில், நேற்று அவர் சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு நேர்காணலுக்கு வந்திருந்தார். அவரிடம் நேர்காணல் செய்த அதிகாரிகள், விசா பெறுவதற்கு அவர் சமர்ப்பித்திருந்த சான்றிதழ்களை சரிபார்த்தபோது, அவை போலியானவை என்பதை கண்டுபிடித்தனர். பின்னர், இதுதொடர்பாக அவர்கள் அளித்த புகாரையடுத்து ரமேஷ் இன்று போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
இதைத்தொடர்ந்து, ரமேஷிடம் நடத்திய விசாரணையில் அமெரிக்க விசா பெறுவதற்கு, அவர் தன்னுடைய அடையாள அட்டை, முன்பு வேலை செய்தது தொடர்பான அனுபவ சான்றிதழ் மற்றும் சம்பள சான்றிதழ் ஆகியவற்றை தனது நண்பர்கள் உதவியுடன் போலியாக பெற்றது தெரிய வந்தது. பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
நன்றி:மாலை மலர்
தெலுங்கானா மாநிலம், நிஷாமாபாத் மாவட்டத்தில் வசித்து வருபவர் அலதி ரமேஷ் (வயது 31). அமெரிக்கா செல்வதற்காக திட்டமிட்டிருந்த ரமேஷ் விசா பெறுவதற்கு சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் விண்ணப்பத்திருந்தார்.
இந்நிலையில், நேற்று அவர் சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு நேர்காணலுக்கு வந்திருந்தார். அவரிடம் நேர்காணல் செய்த அதிகாரிகள், விசா பெறுவதற்கு அவர் சமர்ப்பித்திருந்த சான்றிதழ்களை சரிபார்த்தபோது, அவை போலியானவை என்பதை கண்டுபிடித்தனர். பின்னர், இதுதொடர்பாக அவர்கள் அளித்த புகாரையடுத்து ரமேஷ் இன்று போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
இதைத்தொடர்ந்து, ரமேஷிடம் நடத்திய விசாரணையில் அமெரிக்க விசா பெறுவதற்கு, அவர் தன்னுடைய அடையாள அட்டை, முன்பு வேலை செய்தது தொடர்பான அனுபவ சான்றிதழ் மற்றும் சம்பள சான்றிதழ் ஆகியவற்றை தனது நண்பர்கள் உதவியுடன் போலியாக பெற்றது தெரிய வந்தது. பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
நன்றி:மாலை மலர்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.