.

Pages

Thursday, August 13, 2015

பேரூராட்சி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஆலோசனைக் கூட்டம் !

பேராவூரணி பேரூராட்சி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் வர்த்தக சங்க, லயன்ஸ், ரோட்டரி சங்க நிர்வாகிகள், மகளிர் சுய உதவிக் குழுவினர் கலந்து கொண்டனர்.
               
கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் என்.அசோக்குமார் தலைமை வகித்தார். பேரூராட்சி செயல் அலுவலர் ஆர்.ராஜாராம், வர்த்தக சங்க தலைவர் பி.எஸ். அப்துல்லாஹ், ரோட்டரி சங்கத்தலைவர் அபிராமி ஆர். சுப்பிரமணியன், லயன்ஸ் சங்கத்தலைவர் பொறியாளர் ஜெயச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், "வரும் ஆகஸ்ட்-15 முதல் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் பைகள், கப்புகள் போன்றவைகளை கடைகளில் விற்பது, பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். பிளாஸ்டிக் பொருட்களின் கேடுகளை பொதுமக்களிடம் எடுத்து சொல்ல லயன்ஸ் சங்கம், ரோட்டரி சங்கம் மூலம் பிரச்சாரப் பேரணி மேற்கொள்வது" என தீர்மானிக்கப்பட்டது.
     
கூட்டத்தில் வர்த்தக சங்க செயலாளர் ஆர்.வெங்கடேசன், பொருளாளர் ராஜா, மா.கணபதி, செயற்குழு உறுப்பினர்கள், லயன்ஸ் சங்க செயலாளர் கோவிதரன், நிர்வாகிகள் ராமகிருஷ்ணன், அக்ரி நடராஜன், ரோட்டரி சங்க செயலாளர் முருகு வளவன், நிர்வாகிகள் கௌதமன், முருகானந்தம்,
பேரூராட்சி துணைத்தலைவர் பரிமளா நீலகண்டன், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் மு.சீனிவாசன், குமணன், முத்து தங்கப்பன், ஆனந்தன், ஆர்.மூர்த்தி, எம்.மூர்த்தி, ஏலம்மாள், மணி ரவி, மற்றும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.