.

Pages

Wednesday, August 12, 2015

அரபு நாடுகளை இணைக்கும் புதிய ரயில் சேவை திட்டம் !

வளைகுடா ஒத்துழைப்பு நாடுகள் என அழைக்கப்படும் குவைத், சவூதி அரேபியா, பஹ்ரைன், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் ஆகிய 6 எண்ணெய் வளமிக்க அரபு நாடுகளை இணைக்கும் புதிய இரயில் திட்டம் 2018 ஆம் ஆண்டில் ஓடத் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குவைத்திலிருந்து துவங்கும் இரயில் சவூதி வழியாக பஹ்ரைன், கத்தார் நாடுகளை கடந்து அமீரகத்தை தாண்டி ஓமனின் மஸ்கட் நகரை சென்றடையும் எனவும், இடையிலுள்ள பஹ்ரைன் தீவும் கத்தார் நாடும் தனியான துணை பாதை மற்றும் கடல்வழி பாலங்கள் மூலம் சவூதி இரயில் வழித்தடத்துடன் இணைக்கப்படும்.

சுமார் 15.4 பில்லியன் டாலர் செலவில் 2117 கி.மீ தூரத்திற்கு கட்டமைக்கப்படவுள்ள இந்த இரயில்வே திட்டத்தில் பயணிகள் இரயில் 220 km/hr வேகத்திலும், சரக்கு இரயில்கள் 80 முதல் 120 - 220 km/hr வேகம் வரை செல்லும். இந்த இரயில்கள் அனைத்தும் டீசலை எரிபொருளாக கொண்டு இயங்கும்.

தமிழில்
அதிரை அமீன்
Source: Kuwaittimes

அதெல்லாம் சரி, இல்லாத ஊருக்கெல்லாம் இரயில் வருது ஆனா இருந்த ஊருக்கு இனி எப்போ இரயில் வரும், பேசாம அதிரையை அரபு நாட்டுக்கு எழுதி கொடுத்துருவோமா! அட்லீஸ்ட் இருந்த ரயிலாவது திரும்ப கிடைக்கலாம்!!

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.