.

Pages

Friday, February 5, 2016

மாற்றான் கலாச்சாரத்தை பின்பற்றாதவர்களை அசிங்கப்படுத்துவதா?

மாற்றான்  கலாச்சாரத்தை பின்பற்றுபவர்கள் பின்பற்றட்டும்… அதே நேரத்தில் பின்பற்றாதவர்களை அசிங்கப்படுத்துவதா? என்று சமூக ஆர்வலர் அஞ்சுகோட்டை அப்துல் ரசாக் கேள்வி எழுப்பியுள்ளார்.

சமீபததில் 67வது குடியரசு தினம் கொண்டாடப்பட்டது. குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் பிரான்ஸ் அதிபர் ஹாலண்டே சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவருக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி சிறப்பு விருந்து அளித்தார்.

அந்த விருந்து நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் சிலர், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விருந்து நிகழ்ச்சிக்கு கெஜ்ரிவால் சாக்ஸ் போட்டு செருப்பு அணிந்து வந்தார்.
இதில் என்ன தவறு உள்ளது. இதில் ஏதோ இமாலய தவறு உள்ளது போன்று, அந்த புகைப்படம் வெளியாகி பலரையும் அதிர்ச்சி அடைய வைத்தது என்றும், இந்தியாவை மீண்டும் தர்மசங்கடப்படுத்த வேண்டாம், தயவு செய்து ஒரு ஜோடி ஷூ வாங்கிக் கொள்ளுங்கள் என்று கூறி விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த என்ஜினியர் ஒருவர் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு கடிதம் எழுதியுள்ளார் என்றும், ஷூ வாங்க கெஜ்ரிவாலுக்கு ரூ.364க்கான டிடி அனுப்பியதாகவும் வந்த செய்தியை படித்த போது சற்றே மனம் வேதனை அடைந்தது.

டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் இந்தியாவை அசிங்கப்படுத்தவில்லை, மாறாக இந்தியாவின் எளிமையை உலகுக்கு காட்டியுள்ளார் என்பதுதான் உண்மை. எப்போதும் உண்மை கசக்கத்தான் செய்யும். அடிப்படையில் சமூக அமைப்பில் தவறு உள்ளது.

செருப்பு அணிவதுதான் இந்தியனின் கலாசாரம். அவர் இந்திய கலாசாரத்தை நிலைநாட்டியுள்ளார். நம் இந்திய திரு நாட்டின் முதுகெலும்பாக இருப்பது விவசாயம். எந்த ஒரு விவசாயியும் ஷூ அணிந்து செல்வதில்லை. நமது நாட்டுக்கு தேவை எளிமையுடன் கூடிய முன்னேற்றம் மாறாக பகட்டுடன் கூடிய சுய முன்னேற்றம் அல்ல.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த மெக்கானிக்கல் என்ஜினியரான சுமித் அகர்வால் என்பரிடம் அதிக பணம் இருந்தால் இந்தியாவில் உள்ள ஏழை மக்களுக்கு உதவிகளை செய்யட்டும் மாறாக மற்றவர்களின் மனதை புண்படுத்த வேண்டாம் என்று சமூக ஆர்வலர் அஞ்சுகோட்டை அப்துல் ரசாக் கூறியுள்ளார்.

1 comment:

  1. கலீஃபா உமர் அவர்களின் ஆட்சியை இந்தியாவில் கொண்டு வர ஆசைப்படுகிறேன் என்று மகாத்மா காந்தி அவர்கள் கூறியதை தொடர்ந்து உமரின் ஆட்சிமுறையை டெல்லியில் கொண்டுவர முயற்சிப்பேன் என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் சொன்னதை செயல் படுத்துகிறார்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.