அதிராம்பட்டினம் அருகே திருமணமாகி மூன்று மாதங்களில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து திருச்சி வருவாய்க் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகின்றார்.
அதிராம்பட்டினம் அருகே தம்பிக்கோட்டை வடகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் மகேந்திரன் (25). துபையில் பணியாற்றி வருகிறார். இவருக்கும், திருவாரூர் மாவட்டம், பெருகவாழ்ந்தான் அக்ரஹாரத்தைச் சேர்ந்த இளநாதன் மகள் அகிலாவுக்கும் (19) கடந்த 3 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த 1 மாதத்தில் மகேந்திரன் துபைக்கு சென்று விட்டார். அதன்பின்னர் தம்பிக்கோட்டை வடகாட்டில் உள்ள மாமியார் வீட்டில் அகிலா வசித்து வந்தார்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை (ஆக. 30) பிற்பகல் வீட்டில் இருந்த அகிலா தனது உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீயிட்டுக் கொண்டாராம். இதில் பலத்த காயமடைந்த அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு புதன்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து அகிலாவின் தாய் வாசுகி அளித்தப் புகாரின் பேரில் அதிராம்பட்டினம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். திருமணமான 3 மாதத்தில் அகிலா இறந்துள்ளதால் திருச்சி வருவாய்க் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.
அதிராம்பட்டினம் அருகே தம்பிக்கோட்டை வடகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் மகேந்திரன் (25). துபையில் பணியாற்றி வருகிறார். இவருக்கும், திருவாரூர் மாவட்டம், பெருகவாழ்ந்தான் அக்ரஹாரத்தைச் சேர்ந்த இளநாதன் மகள் அகிலாவுக்கும் (19) கடந்த 3 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த 1 மாதத்தில் மகேந்திரன் துபைக்கு சென்று விட்டார். அதன்பின்னர் தம்பிக்கோட்டை வடகாட்டில் உள்ள மாமியார் வீட்டில் அகிலா வசித்து வந்தார்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை (ஆக. 30) பிற்பகல் வீட்டில் இருந்த அகிலா தனது உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீயிட்டுக் கொண்டாராம். இதில் பலத்த காயமடைந்த அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு புதன்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து அகிலாவின் தாய் வாசுகி அளித்தப் புகாரின் பேரில் அதிராம்பட்டினம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். திருமணமான 3 மாதத்தில் அகிலா இறந்துள்ளதால் திருச்சி வருவாய்க் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.