.

Pages

Saturday, October 15, 2016

பிஜேபி கட்சியில் இருந்து மாவட்ட சிறுபான்மை அணித்தலைவர் தெளலத் ( எ ) தாவூது விலகல் !

அதிராம்பட்டினம், அக்-15
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் தெளலத் ( எ ) தாவூது. இவர் பாரதிய ஜனதா கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட சிறுபான்மை அணித்தலைவராக பொறுப்பில் இருந்தார்.

இந்நிலையில் 'இஸ்லாமிய ஷரியத் சட்டத்தில் கைவைக்க நினைக்கும் பிஜேபி கட்சியின் போக்கு தமக்கு பிடிக்கவில்லை' எனக்கூறி அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட தான் வகித்து வரும் பொறுப்பிலிருந்து விலகி உள்ளதாக இன்று தெளலத் ( எ ) தாவூது அறிவித்துள்ளார். இதுதொடர்பாக கட்சி நிர்வாகியை சந்தித்து தமது விலகலை தெரிவித்துள்ளதாக கூறினார்.

5 comments:

  1. நல்லமுடிவுதான்.
    அதிரைபுகாரி

    ReplyDelete
  2. நல்லமுடிவுதான்.
    அதிரைபுகாரி

    ReplyDelete
  3. பி.ஜே பி.யின் அனைத்துக் கொள்கையும் இஸ்லாமிய எதிர்ப்புத்தான்.இதில் இனைந்ததே ஒரு தவறு.பிரிந்தது நல்லது.

    ReplyDelete
  4. தாவுது காக்கா அவர்கள் பி.ஜே.பி.யின் தேர்தல் அறிக்கையை படிக்காமலேயே கட்சியில் இனைந்து விட்டார் என்று நினைக்கிறேன். பொது சிவில் சட்டத்தையும் நிறைவேற்றபடும் என்று கூறிதான் ஆட்சியை பிடித்தார்கள்.

    ReplyDelete
  5. பொது சிவில் சட்டம் மட்டுமா அவனுங்க அஜெந்தா...அவனுங்க எடுத்து வைக்கு ஒவ்வொரு அடியும் நமக்கு எதிரானதே.. காலம் கடந்த முடிவானாலும் நல்ல முடிவே.. ஆனால் இன்னோரு பெயர் தாங்கி முஸ்லிம் அந்த போஸ்ட்க்கு வராமல் இருக்கனும்.. இன்ஷா அல்லாஹ்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.