அதிரை நியூஸ்: நவ. 19
வளைகுடா அரபு நாடுகளுக்கிடையே ஒருங்கிணைந்த வாட்வரி (unified VAT tax) விதிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே கையெழுத்திடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் எதிர்வரும் 2018 ஜனவரி 1 ஆம் தேதி முதல் சில்லரை பெட்ரோல் விற்பனையின் மீதும் 5% வாட்வரி வசூலிக்கப்படும் என சவுதியின் ஜகாத் மற்றும் வரி வசூலுக்கான பொது ஆணையம் அறிவித்துள்ளது.
உள்நாட்டு பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து மற்றும் அது தொடர்பான வர்த்தகம் ஆகியவைகளின் மீதான வாட்வரி பயண டிக்கெட் கட்டணத்துடன் சேர்த்து கூடுதலாக வசூலிக்கப்படும்.
அதேவேளை வெளிநாட்டு பயணங்கள் மற்றும் சரக்குகள் மீது வாட்வரி விதிக்கப்படாது. மேலும் கூடுதல் பயணப் பொதிகள் (Excess Baggage), இருக்கை முன்பதிவு, பராமரிப்பு, வாகனத்தில் சர்வதேச தரத்திற்கு ஏற்ற பழுது பார்ப்புகள் மற்றும் மாற்றியமைத்தல்கள், சரக்கு பாதுகாத்தல்கள், துறைமுக கட்டணங்கள், பார்க்கிங் கட்டணங்கள், கஸ்டம்ஸ் தீர்வைகள், சுங்க சேவை கட்டணங்கள், போக்குவரத்து தொடர்பான இதரவகைகள், விமான வழித்தட சேவைகள் மற்றும் விமான பணிக்குழு கட்டணங்கள் அனைத்தும் வாட்வரியிலிருந்து விலக்கு பெறுகின்றன.
மேலும் வங்கியில் நடைபெறும் பணப்பரிவர்த்தனைகள், கார் விற்பனைகள், கார்களை கராஜ்களுக்கு விற்பது தொடர்பிலும் வாட்வரி கிடையாது. நெருங்கிய உறவினர்களுக்குள் விற்கப்படும் அல்லது வாடகைக்கு விடப்படும் சொத்துக்களுக்கும் வாட்வரி வசூலிக்கப்படாது.
அதேபோல் வங்கிகள், கிரெடிட் கார்டுகள், பங்குகள், அடமானங்கள், நிதிசார் குத்தகைகள், ஆயுள் காப்பீடு, தனிப்பட்ட நிதி, வட்டி, முதலீட்டு நிதி போன்ற கட்டணமில்லா பணப்பரிவர்தனைகளின் மீதும் வாட்வரி இல்லை.
மேற்காணும் விலக்குகள் தவிர்த்து ஏனைய ஏனைய தயாரிப்புகள், விநியோகம் செய்யப்பட்டு, விற்கப்படும் அனைத்து பொருட்களுக்கும் ஒவ்வொரு பரிமாற்றத்தின் போது தனித்தனியாக வாட்வரி செலுத்த வேண்டும்.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
வளைகுடா அரபு நாடுகளுக்கிடையே ஒருங்கிணைந்த வாட்வரி (unified VAT tax) விதிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே கையெழுத்திடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் எதிர்வரும் 2018 ஜனவரி 1 ஆம் தேதி முதல் சில்லரை பெட்ரோல் விற்பனையின் மீதும் 5% வாட்வரி வசூலிக்கப்படும் என சவுதியின் ஜகாத் மற்றும் வரி வசூலுக்கான பொது ஆணையம் அறிவித்துள்ளது.
உள்நாட்டு பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து மற்றும் அது தொடர்பான வர்த்தகம் ஆகியவைகளின் மீதான வாட்வரி பயண டிக்கெட் கட்டணத்துடன் சேர்த்து கூடுதலாக வசூலிக்கப்படும்.
அதேவேளை வெளிநாட்டு பயணங்கள் மற்றும் சரக்குகள் மீது வாட்வரி விதிக்கப்படாது. மேலும் கூடுதல் பயணப் பொதிகள் (Excess Baggage), இருக்கை முன்பதிவு, பராமரிப்பு, வாகனத்தில் சர்வதேச தரத்திற்கு ஏற்ற பழுது பார்ப்புகள் மற்றும் மாற்றியமைத்தல்கள், சரக்கு பாதுகாத்தல்கள், துறைமுக கட்டணங்கள், பார்க்கிங் கட்டணங்கள், கஸ்டம்ஸ் தீர்வைகள், சுங்க சேவை கட்டணங்கள், போக்குவரத்து தொடர்பான இதரவகைகள், விமான வழித்தட சேவைகள் மற்றும் விமான பணிக்குழு கட்டணங்கள் அனைத்தும் வாட்வரியிலிருந்து விலக்கு பெறுகின்றன.
மேலும் வங்கியில் நடைபெறும் பணப்பரிவர்த்தனைகள், கார் விற்பனைகள், கார்களை கராஜ்களுக்கு விற்பது தொடர்பிலும் வாட்வரி கிடையாது. நெருங்கிய உறவினர்களுக்குள் விற்கப்படும் அல்லது வாடகைக்கு விடப்படும் சொத்துக்களுக்கும் வாட்வரி வசூலிக்கப்படாது.
அதேபோல் வங்கிகள், கிரெடிட் கார்டுகள், பங்குகள், அடமானங்கள், நிதிசார் குத்தகைகள், ஆயுள் காப்பீடு, தனிப்பட்ட நிதி, வட்டி, முதலீட்டு நிதி போன்ற கட்டணமில்லா பணப்பரிவர்தனைகளின் மீதும் வாட்வரி இல்லை.
மேற்காணும் விலக்குகள் தவிர்த்து ஏனைய ஏனைய தயாரிப்புகள், விநியோகம் செய்யப்பட்டு, விற்கப்படும் அனைத்து பொருட்களுக்கும் ஒவ்வொரு பரிமாற்றத்தின் போது தனித்தனியாக வாட்வரி செலுத்த வேண்டும்.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.