.

Pages

Wednesday, November 29, 2017

அதிரை ஈஸ்ட் கோஸ்ட் சாலையில் புதிதாக பொதுநல மருத்துவமனை திறப்பு (படங்கள்)

அதிராம்பட்டினம், நவ.29
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் ஈசிஆர் சாலை காதிர் முகைதீன் கல்லூரி எதிரே அமைந்துள்ள ஆதம் நகர் ~ எம்.எஸ்.எம் நகர் நுழைவாயில் அருகே புதிதாக 'ஸ்கை கேர் கிளினிக்' என்ற பெயரில் பொதுநல மருத்துவச் சேவை இன்று புதன்கிழமை காலை முதல் தொடங்கியது.

நிகழ்ச்சிக்கு பட்டுக்கோட்டை பிரபல மருத்துவர் டி.ஏ.கே. ரத்தினம் பிள்ளை தலைமை வகித்து,, மருத்துவமனையை திறந்து வைத்து வாழ்த்திப்பேசினார்.

இதுகுறித்து மருத்துவர் டி.ஏ.கே. ரத்தினம் பிள்ளை பேரனும், ஸ்கை கேர் மருத்துவமனை மருத்துவர் எஸ். சந்துரூ எம்.டி கூறியது;
பட்டுக்கோட்டையில் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவ சேவையில் ஈடுபட்டுவரும் பிரபல மருத்துவர் டி.ஏ.கே. ரத்தினம் பிள்ளை.  எனது தாதாவான இவர் பொதுமக்களின் நன்மதிப்பை பெற்றவர். பட்டுக்கோட்டை மற்றும் சுற்றுப்புற பகுதி பொதுமக்களுக்கு ரூ.10 கட்டணத்தில் மருத்துவச்சேவை ஆற்றி வருகிறார். இவரது வழிகாட்டுதல் பேரில் எனது மருத்துவ சேவையை அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற கிராமப் பகுதி பொதுமக்களுக்கு வழங்க உள்ளேன். இம்மருத்துவமனையில் மருத்துவத்தில் அனுபவமிக்க மருத்துவர்களால் பொதுநலம் சம்பந்தப்பட்ட அனைத்து வகை மருத்துவ ஆலோசனைகள், பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். இப்பகுதி பொதுமக்கள் இச்சேவையை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். என்றார்.

இந்நிகழ்ச்சியில், மருத்துவர் டி.ஏ.கே. ரத்தினம் பிள்ளை குடும்பத்தினர், நண்பர்கள், அதிரை பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு வாழ்த்தினர்.
மருத்துவமனை வேலை நேரம்: 
காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்கும்.
 

1 comment:

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.