அதிராம்பட்டினம், நவ.23
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் பசுமையை வலியுறுத்தி மரக்கன்றுகள் நடும் பணியில், அதிராம்பட்டினம் சுகாதார முன்னேற்றக் கழகம் (சுமுக) அமைப்பின் தன்னார்வலர்கள் கடந்த சில வருடங்களாக மரக்கன்றுகள் நடும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இவ்வமைப்பின் மூலம் அதிராம்பட்டினம் நடுத்தெரு, புதுமனைத்தெரு, சிஎம்பி லேன், ஆலடித்தெரு, பழைய போஸ்ட் ஆபீஸ் சாலை, ஈசிஆர் சாலை, மெயின் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது.
இந்நிலையில், அதிராம்பட்டினம் பழைய போஸ்ட் ஆபீஸ் - கடைத் தெரு செல்லும் சாலையோரத்தில் 10 இடங்களில் மரக்கன்றுகள் நடும் பணி இன்று வியாழக்கிழமை காலை நடைபெற்றது. இதில், புங்கை, வேம்பு, ஆலமரம், வாகை உள்ளிட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது. இவற்றை ஆடு, மாடு போன்ற கால்நடைகளிடமிருந்து பாதுகாக்க மரக்கன்றை சுற்றி இரும்பிலான வலைக் கூண்டுகள் அமைக்கப்பட்டது.
இதுகுறித்து அதிரை சுகாதார முன்னேற்ற கழக அமைப்பினர் எஸ்.எச் அஸ்லம், தமீம் ஆகியோர் கூறியது;
'அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பசுமையை ஏற்படுத்தும் முயற்சியாக பல்வேறு பகுதிகளில் 1000 மரக்கன்றுகள் நடுதல், நீர் நிலைகளை அதிகப்படுத்துதல், குடியிருப்பு பகுதியில் காணப்படும் கருவேல மரங்களை அகற்றுதல், பிளாஸ்டிக் ஒழிப்பு ஆகியவற்றை இலக்காகக் கொண்டு, இப்பகுதி தன்னார்வலர்களின் கூட்டு முயற்சியாக இப்பணிகளை கடந்த சில வருடங்களாக செயல்படுத்தி வருகிறோம். இதுவரையில் 800 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நட்டுள்ளோம். நாங்கள் நட்ட பல கன்றுகள் இன்று பெரிய மரங்களாக வளர்ந்து சுற்றுச்சூழலலுக்கு பாதுகாப்பு அளிக்கின்றன. இப்பணி தொடர்ந்து நடைபெறும்' என்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் பசுமையை வலியுறுத்தி மரக்கன்றுகள் நடும் பணியில், அதிராம்பட்டினம் சுகாதார முன்னேற்றக் கழகம் (சுமுக) அமைப்பின் தன்னார்வலர்கள் கடந்த சில வருடங்களாக மரக்கன்றுகள் நடும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இவ்வமைப்பின் மூலம் அதிராம்பட்டினம் நடுத்தெரு, புதுமனைத்தெரு, சிஎம்பி லேன், ஆலடித்தெரு, பழைய போஸ்ட் ஆபீஸ் சாலை, ஈசிஆர் சாலை, மெயின் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது.
இந்நிலையில், அதிராம்பட்டினம் பழைய போஸ்ட் ஆபீஸ் - கடைத் தெரு செல்லும் சாலையோரத்தில் 10 இடங்களில் மரக்கன்றுகள் நடும் பணி இன்று வியாழக்கிழமை காலை நடைபெற்றது. இதில், புங்கை, வேம்பு, ஆலமரம், வாகை உள்ளிட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது. இவற்றை ஆடு, மாடு போன்ற கால்நடைகளிடமிருந்து பாதுகாக்க மரக்கன்றை சுற்றி இரும்பிலான வலைக் கூண்டுகள் அமைக்கப்பட்டது.
இதுகுறித்து அதிரை சுகாதார முன்னேற்ற கழக அமைப்பினர் எஸ்.எச் அஸ்லம், தமீம் ஆகியோர் கூறியது;
'அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பசுமையை ஏற்படுத்தும் முயற்சியாக பல்வேறு பகுதிகளில் 1000 மரக்கன்றுகள் நடுதல், நீர் நிலைகளை அதிகப்படுத்துதல், குடியிருப்பு பகுதியில் காணப்படும் கருவேல மரங்களை அகற்றுதல், பிளாஸ்டிக் ஒழிப்பு ஆகியவற்றை இலக்காகக் கொண்டு, இப்பகுதி தன்னார்வலர்களின் கூட்டு முயற்சியாக இப்பணிகளை கடந்த சில வருடங்களாக செயல்படுத்தி வருகிறோம். இதுவரையில் 800 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நட்டுள்ளோம். நாங்கள் நட்ட பல கன்றுகள் இன்று பெரிய மரங்களாக வளர்ந்து சுற்றுச்சூழலலுக்கு பாதுகாப்பு அளிக்கின்றன. இப்பணி தொடர்ந்து நடைபெறும்' என்றனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.