அதிராம்பட்டினம், நவ.25
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காட்டுப்பள்ளித் திடலில் புதிதாக வாரச்சந்தை கடந்த செப்.16 ந் தேதி தொடங்கி பிரதி சனிக்கிழமை தோறும் நடந்து வருகிறது.
மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும் காய்கறித் திருவிழாவில் விற்பனைக்காக காய்கறிகள், பழங்கள், கருவாடு, வத்தல், மளிகைத்தூள் வகைகள் உள்ளிட்டவை அடங்கிய 50 க்கும் மேற்பட்ட தரைக் கடைகள் திடலில் அமைக்கப்பட்டுள்ளன. சந்தையில் காய்கறி ~ கனிகள் விலை மலிவாகவும், ப்ரெஸ்ஸாக கிடைப்பதாலும், வந்து செல்ல பாதுகாப்பாக இருப்பதாலும் பெண்கள் கூட்டம் அதிகமாகக் காணப்படுகிறது. எவ்வித பரபரப்பும் இல்லாமல் அமைதியாக விற்பனை நடந்து வருகிறது. சந்தையில் ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறி, கனிகளை வீட்டிற்கு வாங்கிச் செல்கின்றனர். இரவில் மின்னொளியில் ஜொலிக்கும் சந்தையில் விற்பனை களைகட்டுவதோடு மட்டுமல்லாமல், வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்து வருகிறது.
செய்தி மற்றும் படங்கள்:
மர்ஜூக் (மாணவச் செய்தியாளர்)
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காட்டுப்பள்ளித் திடலில் புதிதாக வாரச்சந்தை கடந்த செப்.16 ந் தேதி தொடங்கி பிரதி சனிக்கிழமை தோறும் நடந்து வருகிறது.
மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும் காய்கறித் திருவிழாவில் விற்பனைக்காக காய்கறிகள், பழங்கள், கருவாடு, வத்தல், மளிகைத்தூள் வகைகள் உள்ளிட்டவை அடங்கிய 50 க்கும் மேற்பட்ட தரைக் கடைகள் திடலில் அமைக்கப்பட்டுள்ளன. சந்தையில் காய்கறி ~ கனிகள் விலை மலிவாகவும், ப்ரெஸ்ஸாக கிடைப்பதாலும், வந்து செல்ல பாதுகாப்பாக இருப்பதாலும் பெண்கள் கூட்டம் அதிகமாகக் காணப்படுகிறது. எவ்வித பரபரப்பும் இல்லாமல் அமைதியாக விற்பனை நடந்து வருகிறது. சந்தையில் ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறி, கனிகளை வீட்டிற்கு வாங்கிச் செல்கின்றனர். இரவில் மின்னொளியில் ஜொலிக்கும் சந்தையில் விற்பனை களைகட்டுவதோடு மட்டுமல்லாமல், வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்து வருகிறது.
செய்தி மற்றும் படங்கள்:
மர்ஜூக் (மாணவச் செய்தியாளர்)
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.