பட்டுக்கோட்டை, நவ.27
பட்டுக்கோட்டை வட்ட ரயில் பயணிகள் நல சங்க கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (26.11.2017 ) மாலை பட்டுக்கோட்டை நிலா பள்ளியில் சங்க தலைவர்.என்.ஜெயராமன் தலைமையில் நடைபெற்றது.
பட்டுக்கோட்டைபகுதியில் மரம் வளர்ப்பு பணியினை சிறப்பாக செய்து வரும் எஸ்.கௌதமனை பாராட்டி பேசினர். 9.புதிய உறுப்பினர்கள் சங்கத்தில் இணைந்தனர்.
கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பட்டுக்கோட்டை- காரைக்குடி அகல ரயில் பாதை அமைக்கும் பணியினை விரைந்து முடித்து சென்னை மற்றும் தமிழகத்தின் தென்பகுதிகளுக்கு பட்டுக்கோட்டையிலிருந்து ரயில் வசதி செய்து தர வேண்டும்.அதுபோல பட்டுக்கோட்டை- திருவாரூர் பாதையினையும் விரைந்து முடித்து சென்னைக்கு ரயில் போக்குவரத்து வசதி செய்து தரவேண்டும்.
தஞ்சாவூர்- பட்டுக்கோட்டை மற்றும் மன்னார்குடி - பட்டுக்கோட்டை புதிய அகல ரயில் பாதை அமைக்கும் பணியினை விரைவில்துவங்கவேண்டும். இப்பணிகளுக்காக அதிக அளவு நிதி ஒதுக்கீட்டை மத்திய அரசு செய்திடல்வேண்டும்.இரு புதியபாதைகளுக்கான நில ஆர்ஜித பணிகளை மாநில அரசு விரைந்து செயல்படுத்தவேண்டும்.இப்பணிகளை துரிதப்படுத்த மத்திய மாநில அமைச்சர்கள் ,பாரளுமன்ற, சட்ம
ன்ற உறுப்பினர்கள், தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்ட ஆட்சியர்களை நேரில் சந்தித்து கோரிக்கை வைக்கவும் முடிவு செய்யப்பட்டது.
பட்டுக்கோட்டை ரயில் நிலைய துவக்கவிழாவன்று ரயில் நிலைய பகுதிகளில் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில்,செயலாளர்.வ.விவேகானந்தம்,துணைத்தலைவர்.கே.லஷ்மிகாந்தன், ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர்.ஞா.மனோகரன்,உறுப்பினர்கள் ஈகா.வைத்தியநாதன்,மு.கலியபெருமாள்,வி.சுப்ரமணி ,கோ.சங்கர் ஆகியோர் கலந்துகொண்டு ரயில் திட்டங்கள் விரைந்து செயல்பட எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் பற்றி விவாதித்தனர்
சங்க பொருளாளர் பி.சுந்தரராஜீலு வரவேற்றார்.செயற்குழு உறுப்பினர் டி.பாலசுப்ரமணியன் நன்றி கூறினார்.
பட்டுக்கோட்டை வட்ட ரயில் பயணிகள் நல சங்க கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (26.11.2017 ) மாலை பட்டுக்கோட்டை நிலா பள்ளியில் சங்க தலைவர்.என்.ஜெயராமன் தலைமையில் நடைபெற்றது.
பட்டுக்கோட்டைபகுதியில் மரம் வளர்ப்பு பணியினை சிறப்பாக செய்து வரும் எஸ்.கௌதமனை பாராட்டி பேசினர். 9.புதிய உறுப்பினர்கள் சங்கத்தில் இணைந்தனர்.
கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பட்டுக்கோட்டை- காரைக்குடி அகல ரயில் பாதை அமைக்கும் பணியினை விரைந்து முடித்து சென்னை மற்றும் தமிழகத்தின் தென்பகுதிகளுக்கு பட்டுக்கோட்டையிலிருந்து ரயில் வசதி செய்து தர வேண்டும்.அதுபோல பட்டுக்கோட்டை- திருவாரூர் பாதையினையும் விரைந்து முடித்து சென்னைக்கு ரயில் போக்குவரத்து வசதி செய்து தரவேண்டும்.
தஞ்சாவூர்- பட்டுக்கோட்டை மற்றும் மன்னார்குடி - பட்டுக்கோட்டை புதிய அகல ரயில் பாதை அமைக்கும் பணியினை விரைவில்துவங்கவேண்டும். இப்பணிகளுக்காக அதிக அளவு நிதி ஒதுக்கீட்டை மத்திய அரசு செய்திடல்வேண்டும்.இரு புதியபாதைகளுக்கான நில ஆர்ஜித பணிகளை மாநில அரசு விரைந்து செயல்படுத்தவேண்டும்.இப்பணிகளை துரிதப்படுத்த மத்திய மாநில அமைச்சர்கள் ,பாரளுமன்ற, சட்ம
ன்ற உறுப்பினர்கள், தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்ட ஆட்சியர்களை நேரில் சந்தித்து கோரிக்கை வைக்கவும் முடிவு செய்யப்பட்டது.
பட்டுக்கோட்டை ரயில் நிலைய துவக்கவிழாவன்று ரயில் நிலைய பகுதிகளில் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில்,செயலாளர்.வ.விவேகானந்தம்,துணைத்தலைவர்.கே.லஷ்மிகாந்தன், ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர்.ஞா.மனோகரன்,உறுப்பினர்கள் ஈகா.வைத்தியநாதன்,மு.கலியபெருமாள்,வி.சுப்ரமணி ,கோ.சங்கர் ஆகியோர் கலந்துகொண்டு ரயில் திட்டங்கள் விரைந்து செயல்பட எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் பற்றி விவாதித்தனர்
சங்க பொருளாளர் பி.சுந்தரராஜீலு வரவேற்றார்.செயற்குழு உறுப்பினர் டி.பாலசுப்ரமணியன் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.