அதிராம்பட்டினம், நவ.22
தமிழகத்தில் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் சர்க்கரையின் விலை கடந்த 1-ம் தேதி முதல் கிலோவுக்கு ரூ.13.50-ல் இருந்து ரூ.25 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதைக் கண்டித்து திமுக சார்பில் தமிழகம் முழுவதும் அனைத்து ரேஷன் கடைகள் முன்பு இன்று புதன்கிழமை காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் திமுக சார்பில், ரேஷன் கடைகள் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திமுக தஞ்சை தெற்கு மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு துணை அமைப்பாளர் எஸ்.எச் அஸ்லம் தலைமையில், பட்டுக்கோட்டை ஒன்றிய பிரதிநிதிகள் அப்துல் ஹலீம், மருதையன் ஆகியோர் முன்னிலையில், அதிராம்பட்டினம் செக்கடி மேடு, கடைத்தெரு, மரைக்கா பள்ளிவாசல் வளாகம், மேலத்தெரு, கடற்கரைத் தெரு ஆகிய பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகள் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், திமுகவினர் 50 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, சர்க்கரை விலை உயர்வை கண்டித்து முழக்கமிட்டனர்.
அதே போல், திமுக அதிராம்பட்டினம் பேரூர் செயலர் இராம. குணசேகரன் தலைமையில், தஞ்சை தெற்கு மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவை அமைப்பாளர் பழஞ்சூர் K. செல்வம், அதிரை பேரூர் அவைத் தலைவர் ஜெ.சாகுல் ஹமீது ஆகியோர் முன்னிலையில், அதிராம்பட்டினம் கடைத்தெரு, மரைக்கா பள்ளிவாசல், சி.எம்.பி லேன், மேலத்தெரு, கடற்கரைத்தெரு, தரகர் தெரு, அண்ணா தெரு, பிஎஸ்என்எல் அலுவலகம் அருகில், செக்கடி மேடு ஆகிய பகுதிகளின் ரேஷன் கடைகள் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், திமுகவினர் 50 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சர்க்கரை விலை உயர்வை கண்டித்து முழக்கமிட்டனர்.
தமிழகத்தில் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் சர்க்கரையின் விலை கடந்த 1-ம் தேதி முதல் கிலோவுக்கு ரூ.13.50-ல் இருந்து ரூ.25 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதைக் கண்டித்து திமுக சார்பில் தமிழகம் முழுவதும் அனைத்து ரேஷன் கடைகள் முன்பு இன்று புதன்கிழமை காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் திமுக சார்பில், ரேஷன் கடைகள் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திமுக தஞ்சை தெற்கு மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு துணை அமைப்பாளர் எஸ்.எச் அஸ்லம் தலைமையில், பட்டுக்கோட்டை ஒன்றிய பிரதிநிதிகள் அப்துல் ஹலீம், மருதையன் ஆகியோர் முன்னிலையில், அதிராம்பட்டினம் செக்கடி மேடு, கடைத்தெரு, மரைக்கா பள்ளிவாசல் வளாகம், மேலத்தெரு, கடற்கரைத் தெரு ஆகிய பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகள் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், திமுகவினர் 50 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, சர்க்கரை விலை உயர்வை கண்டித்து முழக்கமிட்டனர்.
அதே போல், திமுக அதிராம்பட்டினம் பேரூர் செயலர் இராம. குணசேகரன் தலைமையில், தஞ்சை தெற்கு மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவை அமைப்பாளர் பழஞ்சூர் K. செல்வம், அதிரை பேரூர் அவைத் தலைவர் ஜெ.சாகுல் ஹமீது ஆகியோர் முன்னிலையில், அதிராம்பட்டினம் கடைத்தெரு, மரைக்கா பள்ளிவாசல், சி.எம்.பி லேன், மேலத்தெரு, கடற்கரைத்தெரு, தரகர் தெரு, அண்ணா தெரு, பிஎஸ்என்எல் அலுவலகம் அருகில், செக்கடி மேடு ஆகிய பகுதிகளின் ரேஷன் கடைகள் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், திமுகவினர் 50 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சர்க்கரை விலை உயர்வை கண்டித்து முழக்கமிட்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.