தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில், கடந்த சில நாட்களாக இடைவெளி விட்டு அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று புதன்கிழமை இரவு முதல் இன்று வியாழக்கிழமை மாலை வரை அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்தது. மேலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று (நவ.30) வியாழக்கிழமை காலை 8.30 மணி நேர நிலவரப்படி அதிராம்பட்டினத்தில் 27.60 மி.மீ, மாலை 5.30 மணி நேர நிலவரப்படி 13.60 மி.மீ மழை பதிவாகியது.
தஞ்சை மாவட்டத்தில் அதிகபட்சமாக வல்லத்தில் 70 மி.மீ (காலை), கும்பகோணத்தில் 35 மி.மீ (மாலை), பட்டுக்கோட்டையில் 31.80 மி.மீ(காலை), 1.60 மி.மீ (மாலை), பேராவூரணியில் 13.20 மி.மீ (காலை), 2 மி.மீ (மாலை), மதுக்கூரில் 16.40 மி.மீ (காலை), 1.80 மி.மீ (மாலை) மழை பதிவாகியது.
மழை அளவு பற்றிய செய்திகளில் பொதுவாகவே "இன்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில்" என்ற வாசகம் வானியல் ஆய்வுமைய அறிக்கைகளிலும், வெகுஜன ஊடகங்களிலும் இருக்கும். இதன் மூலம் செய்தியில் வந்திருக்கும் மழையின் அளவு முதல் நாள் காலை 8.30மணி முதல் அடுத்த நாள் காலை 8.30 மணிவரை என குழப்பமின்றி எளிதாக புரிய இயலும்.
ReplyDeleteஆனால், உங்களுடைய மழை அளவு செய்திகளில் இந்த தெளிவு இல்லை. குறிப்பாக மாலையில் பதிவான மழை அளவு 24 மணி நேரத்திற்குரியதா? அல்லது காலையிலிருந்து மாலை வரை உள்ள 9 மணி நேரத்திற்குரியதா என்ற குழப்பம் வருகிறது.
வரக்கூடிய காலங்களில் இந்த தெளிவுடன் மழை அளவு செய்திகள் இருக்கும் என எதிர்பார்க்கிறேன்.
கருத்துக்கு நன்றி சகோ. !
Deleteமாவட்ட வானிலை அறிவிப்பில் மழை நிலவரங்கள் குறித்து காலை 8 மணி நேர நிலவரம் மற்றும் மாலை 4.30 மணி நேர நிலவரங்களை தளத்தில் பதிந்து வருகிறோம்....
இப்பதிவில் காலை மற்றும் மாலை மழை நிலவரங்களை இணைத்து வெளியிட்டுள்ளோம். உதாரணமாக, (நவ.30) வியாழக்கிழமை காலை 8.30 மணி நேர நிலவரப்படி அதிராம்பட்டினத்தில் 27.60 மி.மீ, மாலை 5.30 மணி நேர நிலவரப்படி 13.60 மி.மீ மழை பதிவாகியது. அதாவது மொத்தம் 41.20 மி.மீ பதிவு என தலைப்பில் குறிப்பிட்டுள்ளோம். அதன்படி, அதிராம்பட்டினம் சுற்றுப்புறப் பகுதிகளின் மழை நிலவரங்களையும் கூடுதலாக பதிவில் குறிப்பிட்டுளோம். நன்றி