.

Pages

Wednesday, November 29, 2017

சவுதியில் வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு அமர்த்தும் நகைக்கடைகள் மீது நடவடிக்கை!

அதிரை நியூஸ்: நவ.29
சவுதியில் வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு அமர்த்தும் நகைக்கடைகள் மீது நடவடிக்கை

சவுதி அரேபியாவில் உள்ள நகைக்கடைகளில் 100% சவுதி குடிமகன்கள் மட்டுமே வேலை பார்க்க வேண்டும் என்ற சட்டம் எதிர்வரும் டிசம்பர் 3 ஆம் தேதி முதல் கடுமையாக கண்காணிக்கப்பட உள்ளது. மீறி வெளிநாட்டு தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்கள் தங்களுடைய ஒவ்வொரு வெளிநாட்டு ஊழியர்களுக்காகவும் தலா 20,000 ரியால்களை அபராதமாக செலுத்த நேரிடும் என தொழிலாளர் மற்றும் சமூகநல அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சவுதி முழுவதும் சுமார் 6,000 நகைக்கடைகள் உள்ளன. இவற்றில் சுமார் 25,000 பேர் வேலைவாய்ப்புக்களை பெற்றுள்ளனர். எனினும் கடந்த 16 வருடங்களில் சுமார் 50 சதவிகித சவுதியர்களே இத்துறையில் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர், முழுமையாக வேலைவாய்ப்பை வழங்க முடியவில்லை என்ற குறையை தீர்ப்பதற்காகவே தற்போது அதிரடி நகர்த்தல்கள் செய்யப்படுகின்றன.

சவுதி செயல்படும் பல நகைக்கடைகளை நடத்துவது வெளிநாட்டு முதலாளிகளே. ஆவணங்களில் மட்டுமே சவுதிகாரர்கள் முதலாளிகளாக இருப்பார்கள். ஒரு சில கடைகளில் சவுதியரும் வெளிநாட்டினரும் பங்குதாரர்களாக இருப்பார்கள். இந்நிலையில் இந்த சட்டத்தால் சவுதியில் நகை வர்த்தகம் பெருமளவில் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே சவுதி அரேபியர்களையும் வெளிநாட்டினரையும் ஒரளவு கலந்து வேலைக்கு வைத்துள்ள நிறுவனங்கள் சவுதியர்களுக்கு குறைந்த ஊதியத்தை வழங்கியும், அதிக நேரம் வேலை வாங்கியும், அவர்களை நகைக்கடை தொழிலை கற்றுக் கொள்ளவிடாமல் அந்நியப்படுத்தியே வைத்திருப்பதாகவும் அமைச்சகம் புகார் தெரிவித்துள்ளது.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.