.

Pages

Wednesday, November 29, 2017

துபாய் போலீசாரின் அன்புடன் எச்சரிக்கும் குறுஞ்செய்தி!

அதிரை நியூஸ்: நவ.29
துபையில் அமீரக தேசிய தின உட்பட 3 நாள் விடுமுறை கொண்டாட்டங்களின் போது நிகழும் போக்குவரத்து விதிமீறல் குற்றங்களுக்கு கடும் தண்டனைகள் வழங்கப்படும் என நேற்று போலீஸார் அறிவித்திருந்த நிலையில் இன்று தற்செயலாக நடைபெறும் சிறு போக்குவரத்து குற்றங்களுக்காக வழக்குப் பதிவு செய்யப்படாததுடன் அபராதமும் விதிக்கப்படாது மாறாக வாகன ஓட்டி செய்த தவறை குறிப்பிட்டு அதை மீண்டும் செய்ய வேண்டாம் என அன்புடன் எச்சரிக்கும் குறுஞ்செய்தி மட்டுமே அனுப்பப்படும் என்றும், பெருங்குற்றங்கள் மற்றும் வேண்டுமென்றே நிகழ்த்தப்படும் போக்குவரத்து குற்றங்களின் மீது எத்தகைய கருணையும் காட்டப்படாது என்றும் துபை போலீஸார் விளக்கமளித்துள்ளனர்.

குறிப்பாக இயல்பான போக்குவரத்திற்கு சிறிது தடை ஏற்படுத்துவது, புதுப்பிக்கப்படாத வாகன லைசென்ஸூடன் இயக்குவது, சாலையில் வாகனங்களை நிறுத்தி போக்குவரத்திற்கு இடைஞ்சல் தருவது, குழந்தையுடன் வாகனம் ஓட்டி வரும் பெண் பார்க்கிங் கிடைக்காததால் சிறிது நேரம் சாலையோரம் காத்திருப்பது போன்ற இன்னும் பல தற்செயல் போக்குவரத்து குற்றங்கள்.

எனினும் துபையின் போக்குவரத்தை சீராக வைப்பதற்காகவும், குற்றங்களை தடுப்பதற்காகவும் சுமார் 600 போலீஸ் ரோந்து வாகனங்கள் ஈடுபடுத்தப்பட உள்ளன.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.