.

Pages

Saturday, November 18, 2017

ஜெர்மனியில் 20 ஆண்டுகளுக்கு முன் காணமல் போன கார் கண்டுபிடிப்பு !

அதிரை நியூஸ்: நவ.18
சில பல ஆண்டுகளுக்கு முன் நம்ம ஊரச்சேர்ந்த ஒருத்தரு வலை உள்ளிட்ட மீன்பிடி சாதனங்களை விற்பனை செய்து வந்தாருங்க. ஒருமுறை புதுக்கோட்டை மாவட்ட கடலோர பகுதிகளுக்கு பாக்கி வசூலுக்கு சொந்த வாகனத்துல போனவரு... தான் கொண்டு வந்த வாகனத்தையே மணமேல்குடியில மறந்துட்டு பஸ்ஸ புடிச்சு ஊருக்கு வந்த கதையை இன்னும் எங்க செட்டு மறக்காம அப்பப்ப பேசி சிரிப்போம் என்ற 'மறதி' தகவலுடன் ஜெர்மனிக்கு போயிருவோம் வாங்க!

ஜெர்மனியில் பிராங்பர்ட் நகரில் 20 வருடங்களுக்கு முன்பு அதாவது 1997 ஆம் ஆண்டு தற்போது 76 வயதை எட்டிவிட்ட ஒருவர் தனது கார் திருடு போய்விட்டதாக போலீஸில் புகார் தருகிறார். போலீஸார் வலைவீசி தேடியும் கிடைக்கவேயில்லை. இந்நிலையில் பழமையான ஒரு வீட்டை இடிப்பதற்காக அதிலிருந்த பொருட்களை அப்புறப்படுத்திய போது 'திருட்டுப் போனதாக' சொல்லப்பட்ட காரை போலீஸார் கண்டுபிடித்து மீட்டுள்ளனர்.

உண்மையில் கார் திருடு போகவில்லை நம்ம காரு ஓனரு தான் இந்த வீட்டு கராஜ்ல பார்க்கிங் பண்ணிட்டு 20 வருசமா பார்க் பண்ணிய இடத்தையே மறந்து போயிருந்திருக்கிறார். ஒருவழியாக போலீஸார் காரை கண்டுபிடித்து 20 ஆண்டுகளுக்குப் பின் ஓனரிடம் ஒப்படைத்தாலும் அந்த ஓட்ட உடைசல் காரை இனி ஓட்டக்கூடாது, அது ஸ்க்ராப் (கழிவு பொருள்), உடைத்து நொறுக்கு என உத்தரவிட்டுள்ளது. பாவம் ஓனரு... 20 வருசம் கழித்து கூட தன்னுடைய காருடன் இணைய முடியவில்லை.

அதேபோல், ஜெர்மனியில் நடைபெற்ற இன்னொரு சம்பவத்தில் ஒருவருடைய 'திருடு போனதாக' புகார் சொல்லப்பட்ட வாகனத்தை 2 வருடங்கள் கழித்து மீட்டுக் கொடுத்துள்ளனர். அதாவது குடிகார பேர்வழி தான் பார்க் பண்ணியதாக சொன்ன இடத்தில் இருந்து 4 கி.மீ தொலைவில், உண்மை காரணம் போதையால் ஏற்பட்ட மறதி. அந்த வாகனத்தை மீட்கும் போது அந்த ஆளோட ஷூவுக்கள் 40,000 யூரோக்களும், காருக்குள் சுமார் 50,000 யூரோக்கள் மதிப்புள்ள உபகரணங்களும் அப்படியே இருந்துள்ளன.

இந்த வருட ஆரம்பத்தில் ஸ்காட்லாந்தில் ஒருவர் 5 நாட்கள் தனது வாகனத்தை தேடிவிட்டு திருடு போய்விட்டதாக புகார் தெரிவித்துவிட்டு அடுத்த வேலையை பார்க்கப் போய்விட்டார் என்றாலும் அவருடைய வாகனம் சுமார் 6 மாதங்கள் கழித்து  நிறுத்திவிட்டு மறந்த இடத்திலிருந்து மீண்டும் கிடைத்துள்ளது என்றாலும் சந்தோஷம் ரொம்ப நேரம் நீடிக்கவில்லை. 6 மாதம் பார்க்கிங் கட்டணம் செலுத்தாத குற்றத்திற்காக அவர் 5,000 யூரோக்களுக்கு மேல் அபராதம் செலுத்த நேரிட்டது.

Source: The Independent / Msn
தமிழில்: நம்ம ஊரான் 

1 comment:

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.