அதிரை நியூஸ்: நவ.26
2 குழந்தைகளின் தாய் நினைவு இழப்பால் 13 வயது டீன்ஏஜ் நினைவுகளுக்குள் சிக்கி அவதி
இங்கிலாந்து, நியூபோர்ட், வெல்ஷ் சிட்டியைச் சேர்ந்தவர் 22 வயது பெண் ஷன்னொன் எவரெட், ஏற்கனவே 3 வயது பெண் குழந்தைக்கு தாயாக இருக்கும் நிலையில் 2வது குழந்தையை பிரசவிக்கவிருந்தார். மருத்துவமனையில் கடும் ரத்தப்போக்கு மற்றும் சுமார் 68 நிமிடங்கள் இதயம் செயலிழந்த நிலையில் தாயும் சேயும் என 2 உயிர்கள் போராடிக் கொண்டிருந்ததால் மருத்துவர்கள் அவரை செயற்கை கோமா நிலைக்கு கொண்டு சென்றனர்.
செயற்கை கோமா நிலையிலேயே 2வது பிள்ளையை பிரசவித்தவருக்கு மருத்துவ சிகிச்சைகளை தொடர வேண்டி 15 நாட்கள் நினைவற்ற நிலையிலேயே வைக்கப்பட்டிருந்தார் ஷன்னோன். 15 நாட்கள் கழித்து கண் திறந்தவருடைய ஞாபகங்கள் பெருமளவில் அழிந்து போயிருந்தன. அவருக்கு கணவர் இருப்பதையும், 2 குழந்தைகளுக்கு தாய் என்பதையும் சுத்தமாக மறந்து போயிருந்தார். மேலும் அவருடைய 13 வயதிற்கு நினைவுகள் பின்னோக்கிச் சென்றதால் தன்னை இன்னும் திருமணமாகாத இளம் யுவதியாக கருதிக் கொண்டு அதன் தொடர்பிலான செய்திகளை மட்டுமே பேசினார். இதுபோன்ற நோய் 20,000 தாய்மார்களில் ஒருவருக்கு ஏற்படுமாம்.
தவித்துப் போன கணவரும், அவரது தாயும் இன்னபிற உறவினர்களும் அவரது நினைவு திரும்பலுக்காக பல்வேறு முயற்சிகளை மருத்துவர்களின் ஆலோசணையுடன் குழந்தை, கணவருடன் உள்ள பழைய வீடியோக்கள் போன்றவற்றை போட்டுக்காட்டி வருவது ஓரளவு பலன்தர ஆரம்பித்துள்ளதாம். பிறந்த குழந்தையோ தனது பாட்டியின் கண்காணிப்பில் உள்ளது.
ஷன்னோன் வாழ்க்கையிலும் சில பக்கத்தை காணோம்.
Source: dailymail.co.uk
தமிழில்: நம்ம ஊரான்
2 குழந்தைகளின் தாய் நினைவு இழப்பால் 13 வயது டீன்ஏஜ் நினைவுகளுக்குள் சிக்கி அவதி
செயற்கை கோமா நிலையிலேயே 2வது பிள்ளையை பிரசவித்தவருக்கு மருத்துவ சிகிச்சைகளை தொடர வேண்டி 15 நாட்கள் நினைவற்ற நிலையிலேயே வைக்கப்பட்டிருந்தார் ஷன்னோன். 15 நாட்கள் கழித்து கண் திறந்தவருடைய ஞாபகங்கள் பெருமளவில் அழிந்து போயிருந்தன. அவருக்கு கணவர் இருப்பதையும், 2 குழந்தைகளுக்கு தாய் என்பதையும் சுத்தமாக மறந்து போயிருந்தார். மேலும் அவருடைய 13 வயதிற்கு நினைவுகள் பின்னோக்கிச் சென்றதால் தன்னை இன்னும் திருமணமாகாத இளம் யுவதியாக கருதிக் கொண்டு அதன் தொடர்பிலான செய்திகளை மட்டுமே பேசினார். இதுபோன்ற நோய் 20,000 தாய்மார்களில் ஒருவருக்கு ஏற்படுமாம்.
தவித்துப் போன கணவரும், அவரது தாயும் இன்னபிற உறவினர்களும் அவரது நினைவு திரும்பலுக்காக பல்வேறு முயற்சிகளை மருத்துவர்களின் ஆலோசணையுடன் குழந்தை, கணவருடன் உள்ள பழைய வீடியோக்கள் போன்றவற்றை போட்டுக்காட்டி வருவது ஓரளவு பலன்தர ஆரம்பித்துள்ளதாம். பிறந்த குழந்தையோ தனது பாட்டியின் கண்காணிப்பில் உள்ளது.
ஷன்னோன் வாழ்க்கையிலும் சில பக்கத்தை காணோம்.
Source: dailymail.co.uk
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.