.

Pages

Thursday, November 23, 2017

பட்டுக்கோட்டையில் எம்.எல்.ஏ சி.வி சேகர் தலைமையில் அதிமுகவினர் வெடி வெடித்து உற்சாகக் கொண்டாட்டம் (படங்கள்)

பட்டுக்கோட்டை, நவ.23
தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் அணிக்கே இரட்டை இலை சின்னம் என தேர்தல் ஆணையம் இன்று வியாழக்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதையடுத்து தமிழகமெங்கும் அதிமுகவினர் உற்சாகமாக் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சி.வி சேகர் எம்.எல்.ஏ தலைமையில், அதிமுகவினர் பட்டுக்கோட்டை மனிகுண்டு அருகில் வெடி வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி உற்சாகமாகக் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்நிகழ்ச்சியில், பட்டுக்கோட்டை ஒன்றியச் செயலர் சுப்பிரமணியன், ஆதிராஜாராம் உள்ளிட்ட அதிமுகாவினர் பலர்  கலந்துகொண்டனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.