.

Pages

Sunday, November 19, 2017

தஞ்சையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா ~ விளையாட்டுப் போட்டிகள் தொடக்கம் (படங்கள்)

தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டரங்கில் டாக்டர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளை  வேளாண்மைத்துறை அமைச்சர் இரா துரைகண்ணு இன்று (19.11.2017) துவக்கி வைத்தார்.  தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர்  ஆ.அண்ணாதுரை தலைமையும், மாநிலங்களவை உறுப்பினர் ஆர். வைத்திலிங்கம் முன்னிலை வகித்தார்கள்.

வருகின்ற 29.11.2017 அன்று தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் மாநகராட்சி மைதானத்தில்  டாக்டர் எம்.ஜி,ஆர் நூற்றாண்டு விழா நடைபெறவுள்ளது.

நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பள்ளி மாணவ, மாணவியருக்கான ஒன்றிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவியர்களுக்கு மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டியினை மாண்புமிகு. வேளாண்மைத்துறை அமைச்சர் அவர்கள் துவக்கிவைத்தார்கள். 

இதில் தடகளம், கூடைப்பந்து, இறகுப்பந்து, கைப்பந்து, ஹாக்கி, கபாடி, கோ-கோ, வாலிபால் மற்றும் நீச்சல் ஆகிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது.  இப்போட்டிகளில் 1500 மாணவ, மாணவியர்கள் கலந்துகொண்டனர்.

முன்னதாக மாணவ, மாணவியரின் தப்பாட்டம், சிலம்பாட்டம், வீர விளையாட்டுக்கள் நடைபெற்றது.

இவ்விழவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கு. பரசுராமன் (தஞ்சாவூர்),                ஆர்.கே. பாரதிமோகன் (மயிலாடுதுறை), ஒருங்கிணைந்த பால் கூட்டுறவு சங்க தலைவர் காந்தி, மாவட்ட கூட்டுறவு சங்க தலைவர் துரை திருஞானம், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் மோகன், நிக்கல்சன் கூட்டுறவு வங்கி தலைவர் அறிவுரைநம்பி, துணைத்தலைவர் புண்ணியமூர்த்தி, இயக்குநர்  சரவணன், நிலவள வங்கி தலைவர் துரைவீரணன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.ஜி.எம். சுப்ரமணியன், ராம்குமார், முன்னாள் மாநகராட்சி மேயர் சாவித்திரி கோபால், கல்வி புரவலர் ரமேஷ்,  மாவட்ட வருவாய் அலுவலர் ந. சக்திவேல், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மந்திராச்சலம், தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் க. பாபு, தஞ்சாவூர் வட்டாட்சியர் தங்கபிரபாகரன், வட்டார வளர்சசி அலுவலர்கள் துரை, சூரியநாராயணன் மற்றும் அனைத்துறை அலுவலர்கள், மாவட்ட பயிற்றுநர்கள், உடற்கல்வி ஆசிரியர், ஆசிரியைகள், பொதுமக்கள், பத்திரிக்கை துறையினர் ஆகியோர் கலந்துகொண்டனர். 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.