அமீரகம், அஜ்மானில் தாயின் கவனக்குறைவால் தெருவில் சுற்றிக் கொண்டிருந்த ஒன்றரை வயது குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது.
அஜ்மானில் ஆசிய நாட்டைச் சார்ந்த ஒருவருடைய 20 மாத குழந்தை அஜ்மான் போலீஸாரின் முயற்சியால் மீண்டும் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. அக்குழந்தையின் தாய் வீட்டு வேலைகளில் முழ்கியிருந்த போது குழந்தை வீட்டை விட்டு வெளியேறி அல் புஸ்தான் பகுதியில் சுற்றிக் கொண்டிருந்துள்ளான். இதை கவனித்த இமராத்தி ஒருவர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தந்தார்.
குழந்தையை மீட்ட போலீஸாருக்கு குழந்தை காணாமல் போனது குறித்து அதுவரை எத்தகைய புகாரும் வராததால் மிகுந்த சிரமத்திற்கு இடையில் அக்குழந்தையின் வீட்டை கண்டுபிடித்து தாயிடம் ஓப்படைத்தனர். குழந்தையை போலீஸார் ஒப்படைக்கும் வரை காணாமல் போனதே தெரியாமல் ரொம்ப பிசியாக இருந்துள்ளார் அதன் தாய்.
மேலும் குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைக்கும் போது, இனிமேல் கவனக்குறைவாக இருக்க மாட்டேன் என்றும்; முன்புறக் கதவை கவனமாக எப்போது உள்தாழ்பாள் போட்டு அடைத்து வைத்திருப்பேன் என்றும் உறுதிமொழி பத்திரம் எழுதி வாங்கிக் கொண்டனர்.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.