.

Pages

Saturday, November 18, 2017

துபாயில் நடந்த கிரிக்கெட் போட்டியில் ரன்னர் பட்டம் வென்ற அதிரை அணி (முழு விவரம்)

அதிரை நியூஸ்: நவ.18
அமீரகம் துபாயில் ஸ்மார்ட் டீம் நடத்திய மாபெரும் கிரிக்கெட் தொடர்போட்டி குளோபல் வில்லேஜ் மைதானத்தில் கடந்த 2 மாதத்திற்கும் மேலாக நடந்து வந்தது. இதில், அதிராம்பட்டினம், மதுக்கூர், முத்துப்பேட்டை, தோப்புத்துறை, வேதாரண்யம், கடையநல்லூர், கீழக்கரை, நாகர்கோவில் உட்பட தமிழக அணிகளும், கேரளா மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட மொத்தம் 12 அணிகள் கலந்துகொண்டு விளையாடினர்.

தொடரின் இறுதி ஆட்டத்தில், தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் கிரிக்கெட் கிளப் அணி (ACC) மற்றும் வோஸ்டோக் (VOSTOK) நிறுவன அணி கலந்துகொண்டு விளையாடினர். அதிரை கிரிக்கெட் கிளப் அணியில் சிராஜ், பிஸ்மில்லாகான், அலி, காதர், சலாம், சிஜா, முகைதீன், ஜவாஹிர், அன்வர், அம்ஜத், பாலா, ஹமீது, பெரோஸ், இப்ராஹீம், மர்ஜூக், மஜீது ஆகிய வீரர்கள் இடம் பெற்று இருந்தனர்.

ஆட்டத்தின் முதலில் வோஸ்டோக் நிறுவன அணி பேட்டிங் செய்தது. ஆட்ட முடிவில் அனைத்து விக்கெட்கள் இழந்து 110 ரன்கள் எடுத்தது. பின்னர் பேட்டிங் செய்த  அதிரை அணி, ஆட்ட முடிவில் 90 ரன்கள் மட்டும் எடுத்தது, இதையடுத்து, 20 ரன்கள் வித்தியாசத்தில் வோஸ்டோக் நிறுவன அணி சாம்பியன் பட்டம் பெற்றது. தொடரில் 2 ம் இடம் பிடித்த அதிரை கிரிக்கெட் கிளப் அணி ரன்னர் பட்டம் பெற்றது.

தொடரில் சிறந்த பந்து வீச்சிற்காக 'பெஸ்ட் பவுலர்' மற்றும் சிறந்த ஆட்டத்திற்காக 'மேன் ஆஃப் த மேட்ச்' விருதுகளை அதிராம்பட்டினம் பெரோஸ் தட்டிச்சென்றார். சாதனை நிகழ்த்திய இவருக்கு சக வீரர்கள் பாராட்டு தெரிவித்து வாழ்த்தினர்.
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.