.

Pages

Sunday, November 19, 2017

ஆஸ்திரேலியாவில் முங்கோ மனிதன் (படங்கள்)

அதிரை நியூஸ்: நவ.19
ஆஸ்திரேலியாவில் 42,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட முங்கோ மனிதன் மீண்டும் புதைக்கப்பட்டான்.

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் சிட்னி மாநகருக்கு மேற்கே சுமார் 750 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது முங்கோ உப்பு ஏரிப்படுகை. இங்கு 1974 ஆம் ஆண்டு சுமார் 42,000 ஆண்டுகளுக்கு முன் அதாவது பனியுகம் (the Ice Age) எனக் கருதப்படும் காலத்தில் வாழ்ந்த ஆதிவாசி இன மனிதனின் எழும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டு ஆஸ்திரேலிய தலைநகர் கான்பெராவில் அமைந்துள்ள தேசிய பல்கலைக்கழகத்தில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வந்தது.

முங்கோ உப்பு ஏரிப்படுகையில் (Mungo Salt Water Lake) இம்மனிதனின் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டதால் இவனுக்கு முங்கோ மனிதன் (Mungo Man) என்றே பெயரும் சூட்டப்பட்டது. இந்த முங்கோ மனிதனின் எழும்புகள் மீண்டும் அவனது வழித்தோன்றல்கள் எனக் கருதப்படும் ஆஸ்திரேலியாவின் ஆதிகுடிகளிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டது.

முங்கோ மனிதனுக்கு அபாரிஜின் (Aborigines) எனப்படும் ஆஸ்திரேலியா ஆதிவாசிகள் தங்களுடைய மரபுப்படி வழிபாடுகள் செய்தும், இத்தனை வருடங்களாக தோண்டியெடுக்கப்பட்டு ஆய்வு என்ற பெயரில் அவனை தொந்தரவு செய்ததற்கு மன்னிப்பு வேண்டியும் மீண்டும் புதைக்கப்பட்டான். இனி அவன் நிம்மதியாக உறங்குவான் என முத்தி முத்தி இன (Mutthi Mutthi Tribe) ஆதிவாசித் தலைவர் ஒருவர் தெரிவித்தார்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.