.

Pages

Wednesday, November 22, 2017

அமீரக கொர்பக்கான் வெள்ளத்தில் அடித்துச் செல்லபட்ட இந்திய மாணவர் உடல் ஓமன் நாட்டு அணையில் கண்டுபிடிப்பு !

அதிரை நியூஸ்: நவ.22
அமீரகம் கொர்பக்கான் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இந்திய
மாணவரின் உடல் ஓமன் நாட்டு அணையில் கண்டுபிடிப்பு.

கடந்த நவம்பர் 16 ஆம் தேதி ராஸ் அல் கைமாவிலிருந்து கொர்பக்கானுக்கு சுற்றுலா சென்ற 6 இந்திய மாணவர்களின் வாகனம் திடீர் வெள்ளத்தில் சிக்கியதும் அதிலிருந்து 5 பேர் காப்பற்றப்பட்டதும் அறிந்ததே.

காருடன் காணாமல் போன 18 வயது மாணவன் ஆல்பர்ட் ஜாயை தேடும் பணியில் துபை, ஷார்ஜா, அபுதாபி போலீஸார் ஈடுபட்டதுடன் ஹெலிகாப்டர் மற்றும் மோப்ப நாய்களும் தேடல்களில் பயன்படுத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில், வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்ட மாணவனின் உடல் ஓமன் நாட்டின் 'மதா அணையில்' இன்று காலை 11.30 மணியளவில் ராயல் ஓமன் போலீஸாரால் கண்டுபிடிக்கப்பட்டு, உடல் மீட்கப்பட்டுள்ளது. மாணவனின் தந்தை உடலை அடையாளம் காண்பதற்காக ஓமன் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.