அதிரை நியூஸ்: நவ.21
அமீரகத்தின் துபை, அபுதாபி, அஜ்மான், ராஸ் அல் கைமா உட்பட பல எமிரேட்டுகளும் போக்குவரத்து விதிமீறல்களுக்காக விதிக்கப்பட்டுள்ள அபராதங்களை செலுத்த பல்வேறு தள்ளுபடிகளை அறிவித்து வருகின்றன.
இந்த வரிசையில் தற்போது புஜைராவும் இணைந்துள்ளது. அமீரகத்தில் வழங்கி மகிழும் ஆண்டு கடைபிடிக்கப் படுவதாலும், அமீரக தேசிய தினம் கொண்டாடப்படவுள்ளதாலும் இந்த 50% சிறப்புத் தள்ளுபடியை அறிவிப்பதாக புஜைரா போலீஸ் துறை அறிவித்துள்ளது.
இந்த 50% அபராத சிறப்புத் தள்ளுபடி சலுகையை எதிர்வரும் நவம்பர் 25 ஆம் தேதி முதல் 2018 ஜனவரி 4 ஆம் தேதி வரை பயன்படுத்திக் கொள்ளலாம் என புஜைராவின் பட்டத்து இளவரசர் ஷேக் முஹமது பின் ஹமது அல் ஷர்க்கி அவர்கள் இசைவு தெரிவித்துள்ளதாக புஜைரா போலீஸ் துறைத் தலைவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்
அமீரகத்தின் துபை, அபுதாபி, அஜ்மான், ராஸ் அல் கைமா உட்பட பல எமிரேட்டுகளும் போக்குவரத்து விதிமீறல்களுக்காக விதிக்கப்பட்டுள்ள அபராதங்களை செலுத்த பல்வேறு தள்ளுபடிகளை அறிவித்து வருகின்றன.
இந்த வரிசையில் தற்போது புஜைராவும் இணைந்துள்ளது. அமீரகத்தில் வழங்கி மகிழும் ஆண்டு கடைபிடிக்கப் படுவதாலும், அமீரக தேசிய தினம் கொண்டாடப்படவுள்ளதாலும் இந்த 50% சிறப்புத் தள்ளுபடியை அறிவிப்பதாக புஜைரா போலீஸ் துறை அறிவித்துள்ளது.
இந்த 50% அபராத சிறப்புத் தள்ளுபடி சலுகையை எதிர்வரும் நவம்பர் 25 ஆம் தேதி முதல் 2018 ஜனவரி 4 ஆம் தேதி வரை பயன்படுத்திக் கொள்ளலாம் என புஜைராவின் பட்டத்து இளவரசர் ஷேக் முஹமது பின் ஹமது அல் ஷர்க்கி அவர்கள் இசைவு தெரிவித்துள்ளதாக புஜைரா போலீஸ் துறைத் தலைவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.