.

Pages

Monday, November 20, 2017

அதிராம்பட்டினத்தில் வீணாகும் குடிநீர் (படங்கள்)

அதிராம்பட்டினம், நவ.20
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு உட்பட்ட 1 வது வார்டு சுரைக்கா கொல்லை பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு உள்ள குடிநீர் குழாயில் இருந்து குடிநீர் வெளியேறி வீணாகிறது. குறிப்பாக, குடியிருப்பு பகுதிகளுக்கு விநியோகிக்கும் காலக்கட்டங்களில் குடிநீர் வெளியேறி வருகிறது.

அதே போல், அதிராம்பட்டினம் பேரூராட்சி 8 வது வார்டு கடற்கரைத்தெரு பகுதியில் கடந்த 7 தினங்களாக இப்பகுதி, 8, 9 வார்டு ஆகிய பகுதிகளுக்கு விநியோகிக்கும் பிரதான குடிநீர் குழாய் உடைந்து நீர் வெளியேறி, அதன் அருகில் உள்ள கழிவு நீர் வடிகாலில் கலக்கிறது. இதனால், கழிவு நீர் குடிநீரில் கலந்து தொற்று நோய் பரவும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் கலக்கமடைந்தனர். இவற்றை, அதிராம்பட்டினம் பேரூர் நிர்வாகம் உடனடியாக சரிசெய்ய இப்பகுதியினர் கோரிக்கை விடுத்தனர்.

செய்தி மற்றும் படங்கள்:
மர்ஜூக் ( மாணவச் செய்தியாளர்)
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.