.

Pages

Tuesday, November 28, 2017

நண்பரை அவமதித்து வாட்ஸப் செய்தி அனுப்பிய பெண்ணுக்கு 1 லட்சம் டாலர் அபராதம்!

அதிரை நியூஸ்: நவ. 28
நண்பரை அவமதித்து வாட்ஸப் செய்தி அனுப்பிய குவைத் பெண்ணுக்கு 1 லட்சம் டாலர் அபராதம்

குவைத்தில் நண்பர் ஒருவருடன் ஏற்பட்ட மனத்தாங்கலை அடுத்து அவரை அவமதிக்கும் வாசகங்களை கொண்ட வாட்ஸப் செய்தி ஒன்றை அவருக்கு அனுப்பினார், நண்பர் (ஆணா பெண்ணா என்று தெரியவில்லை) குவைத் சைபர் கிரைம் துறையில் புகார் அளிக்க, செய்தி அனுப்பிய பெண்ணுக்கு 30,000 குவைத் தினார்ககள் (சுமார் 1 லட்சம் டாலர்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளார் என குவைத்தை சேர்ந்த  El Rdar என்ற செய்தித்தளம் தெரிவித்துள்ளது.

அவர் அனுப்பிய செய்தி இது தான் "You have no shame and your parents failed to properly bring you up," இதில் கடும் அபராதம் விதிக்கும் வகையில் என்ன உள்ளது என்பதை கண்டுபிடித்துக் கொள்ளவும். தீர்ப்பை தொடர்ந்து வழமைபோல் சமூக ஊடகங்களில் வாதப் பிரதிவாதங்கள் கொடிகட்டி பறக்கின்றது.

பொதுவாக வளைகுடா அரபு நாடுகளில் வாட்ஸப் போன்ற சமூக ஊடகங்களை தவறாக பயன்படுத்துவோர் மீது கடுமையான தண்டனைகள் விதிக்கப்படுகின்றன. கடந்த மாதம் 2 சவுதி பெண்கள் வாட்ஸப் மூலம் ஒருவரையொருவர் வசைமாறி பொழிந்து கொண்டனர். விளைவு இருவருக்கும் தலா 10 கசையடியுடன் பிரச்சனை முடிவுக்கு வந்தது என Okaz பத்திரிக்கை தெரிவித்திருந்தது.

மேலும் Okaz பத்திரிக்கை தெரிவிப்பதாவது, சவுதியில் கடந்த 6 மாதங்களில் சுமார் 220 சைபர் கிரைம் வழக்குப் பதிவுகள் செய்யப்பட்டுள்ளன.

அமீரகத்திலும் பேஸ்புக், வாட்ஸப் போன்ற சமூக ஊடக பயன்பாடு குறித்து வழிகாட்டல் நெறிமுறைகள் உள்ளன. 2012 ஆம் ஆண்டின் சைபர் கிரைம் சட்டப்படி, சமூக ஊடகங்களில் இஸ்லாம், நன்னம்பிக்கைகள் மற்றும் நல்லொழுக்க நெறிகளை அவமதிக்கும் கருத்துக்களை பரப்புவது தண்டனைக்குரிய குற்றமாகும்.

மேலும் தனியுரிமை மீறல், அவதூறு போன்றவற்றை பரப்புவது, மற்றொருவருடைய புகழை கெடுக்கும் வகையில் அனுமதியின்றி தனிநபர் தகவல்களை பரப்புவது, பதிவது போன்றவையும் சைபர் கிரைம் சட்டத்தின்படி நடவடிக்கைகளுக்கு உட்பட்டவையே.

Source: StepFeed / Msn
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.