ஓமனின் 47வது தேசிய தினம் இன்று கொண்டாடப்பட்டதை, ஓமனின் மன்னரும் ராணுவத்தின் சுப்ரீம் கமாண்டருமான சுல்தான் கபூஸ் பின் சயீத் அவர்கள் ஸீப் (SEEB) மாநிலத்தின் அதிரடிப் போலீஸ் படை தலைமையக மைதானத்தில் ஓமன் நாட்டு தேசிய கொடியை ஏற்றிவைத்து வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
ஓமானின் தேசிய தினத்தை முன்னிட்டு மன்னர் சுல்தான் கபூஸ் பிள் சயீத் அவர்கள் 131 வெளிநாட்டினர் உட்பட 257 சிறைவாசிகளை விடுதலை செய்தார். ஓமன் முழுவதும் தேசிய கொடிகள் பட்டொளிவீசி பறக்கின்றன, மேலும் வாகனங்களிலும் தேசிய தினத்தை போற்றும் அலங்காரங்கள் செய்யப்பட்டு சாலைகளில் வாகன ஓட்டிகள் உற்சாகப் பெருக்குடன் வலைய வருகின்றனர்.
ஓமன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனமும் தனது பங்காக 47% தள்ளுபடி சலுகையை அறிவித்துள்ளது. மஸ்கட் மற்றும் ஸலாலா சர்வதேச விமான நிலையங்களிலிருந்து பிற சர்வதேச தடங்களில் பறக்கும் பயணிகள் நவம்பர் 20 ஆம் தேதி வரை நீடிக்கும் சிறப்புத் தள்ளுபடி டிக்கெட் விற்பனையில் முன்பதிவு செய்து எதிர்வரும் 2018 மே மாதம் 31 ஆம் தேதி வரை பறக்கலாம். எனினும், கீழ்க்காணும் தடங்களுக்கு மட்டும் சிறப்புத் தள்ளுபடி செல்லாது. அனைத்து உள்நாட்டு சேவைகள், கோழிக்கோடு (Calicut), ஜித்தா, மதீனா, தோஹா மற்றும் மணிலா.
Sources: Gulf News & Times of Oman
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.