அதிரை நியூஸ்: நவ.25
சவுதி அரேபியாவில் தற்போது வரை கட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே வாழ்விட விசாக்கள் வழங்கப்படுகின்றன. குறிப்பாக சவுதியில் பணியின் நிமித்தம் தங்கி இருப்பவர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர்கள், வியாபார நிமித்தம் பயணம் மேற்கொள்பவர்கள் மற்றும் புனித யாத்திரைக்காக மக்கா மதினாவிற்கு வருபவர்கள் என வரையறுக்கப்பட்டே வழங்கப்பட்டு வருகின்றன.
பட்டத்து இளவரசரின் பெட்ரோலியத்திற்கு பதிலான மாற்றுப் பொருளாதார திட்டங்களில் ஒன்றாக வெளிநாட்டினருக்கு சுற்றுலா விசாக்களை அறிமுகப்படுத்தவும், அனுமதிக்கப்படும் சுற்றுலாத் தளங்களை அடையாளங் கண்டு இறுதி செய்யும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
எனவே, அடுத்த ஆண்டு முதல் சுற்றுலா விசாக்கள் அறிமுகப்படுத்தப்படுவதுடன் அவற்றை ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கவும் அறிவுறுத்தப்படுவார்கள் என சவுதி சுற்றுலா மற்றும் கலாச்சார ஸ்தலங்களுக்கான தலைவர் இளவரசர் சுல்தான் பின் சல்மான் தெரிவித்துள்ளார்.
சுற்றுலாவாசிகளை கவரும் வகையில் முதற்கட்டமாக செங்கடல் ஓரம் 2022 ஆம் ஆண்டுக்குள் சுமார் 50 செயற்கை தீவுகள் உருவாக்கப்படுவதுடன் சுமார் 2,000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான, பாறைகளை குடைந்து உருவாக்கப்பட்ட 'மதாயின் சாலிஹ்' எனப்படும் நபி சாலிஹ் (அலை) அவர்கள் காலத்தில் அழிக்கப்பட்ட சமுதாயத்தினரின் நகரமும் திறந்துவிடப்படவுள்ளது.
Source: Khaleejtimes
தமிழில்: நம்ம ஊரான்
சவுதி அரேபியாவில் தற்போது வரை கட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே வாழ்விட விசாக்கள் வழங்கப்படுகின்றன. குறிப்பாக சவுதியில் பணியின் நிமித்தம் தங்கி இருப்பவர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர்கள், வியாபார நிமித்தம் பயணம் மேற்கொள்பவர்கள் மற்றும் புனித யாத்திரைக்காக மக்கா மதினாவிற்கு வருபவர்கள் என வரையறுக்கப்பட்டே வழங்கப்பட்டு வருகின்றன.
பட்டத்து இளவரசரின் பெட்ரோலியத்திற்கு பதிலான மாற்றுப் பொருளாதார திட்டங்களில் ஒன்றாக வெளிநாட்டினருக்கு சுற்றுலா விசாக்களை அறிமுகப்படுத்தவும், அனுமதிக்கப்படும் சுற்றுலாத் தளங்களை அடையாளங் கண்டு இறுதி செய்யும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
எனவே, அடுத்த ஆண்டு முதல் சுற்றுலா விசாக்கள் அறிமுகப்படுத்தப்படுவதுடன் அவற்றை ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கவும் அறிவுறுத்தப்படுவார்கள் என சவுதி சுற்றுலா மற்றும் கலாச்சார ஸ்தலங்களுக்கான தலைவர் இளவரசர் சுல்தான் பின் சல்மான் தெரிவித்துள்ளார்.
சுற்றுலாவாசிகளை கவரும் வகையில் முதற்கட்டமாக செங்கடல் ஓரம் 2022 ஆம் ஆண்டுக்குள் சுமார் 50 செயற்கை தீவுகள் உருவாக்கப்படுவதுடன் சுமார் 2,000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான, பாறைகளை குடைந்து உருவாக்கப்பட்ட 'மதாயின் சாலிஹ்' எனப்படும் நபி சாலிஹ் (அலை) அவர்கள் காலத்தில் அழிக்கப்பட்ட சமுதாயத்தினரின் நகரமும் திறந்துவிடப்படவுள்ளது.
Source: Khaleejtimes
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.