.

Pages

Tuesday, November 28, 2017

அமீரக தேசிய தின கொண்டாட்டத்தில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை (முழு விவரம்)

அதிரை நியூஸ்: நவ.28
அமீரக தேசிய தின கொண்டாட்டத்தை முன்னிட்டு சாலைகளில் அத்துமீறும் வாகனம் ஓட்டிகள் கடும் தண்டனைகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

அமீரக தேசிய தின கொண்டாடத்தின் பெயரில் வாகன ஓட்டிகள் பிற வாகன ஒட்டிகள் மற்றும் பிற சாலை பயனர்களுக்கு ஆபத்து நேரிடும் வகையில் நடந்து கொள்வது, சாலையின் நடுவில் வாகனங்களை நிறுத்துவது, அதிக சப்தமெழுப்பும் வாகனங்களை இயக்குவது, வாகனத்திலிருந்து குப்பைகளை எறிவது, நுரை தெளிப்புக்களில் ஈடுபடுவது போன்ற அத்துமீறல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் அபராதங்கள் விதிக்கப்படும் என துபை போலீஸ் எச்சரித்துள்ளது.

அமீரக தேசிய தின கொண்டாடட்களின் போது ஒழுங்கீனமான நடத்தை மற்றும் ஆபத்தான முறையில் வாகன இயக்கம் ஆகியவற்றிற்காக 2000 திர்ஹம் அபராதம், 23 கரும்புள்ளிகள் மற்றும் 60 நாள் வாகன முடக்கம் போன்ற தண்டனைகளை பெற நேரிடும். முக்கிய சந்திப்புக்கள், இன்டெர் செக்ஷன்கள் போன்றவற்றுடன் மொபைல் ரேடார்கள் மூலமும் காவல் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும்.

குற்றமும் தண்டனையும்:
1. ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டினால் 2,000 திர்ஹம், 23 கரும்புள்ளிகள் மற்றும் 60 நாட்களுக்கு வாகன முடக்கம்.
2. முறையான காரணமின்றி நடுவழியில் வாகனத்தை நிறுத்தினால் 1,000 திர்ஹம் அபராதம் மற்றும் 6 கரும்புள்ளிகள்.
3. அதிக சப்தமெழுப்பும் வாகனத்தை இயக்கினால் 2,000 திர்ஹம் அபராதம் மற்றும் 12 கரும்புள்ளிகள்.
4. அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மேல் காணப்படும் கண்ணாடி மறைப்புக்கு (Window Tint) 1,500 திர்ஹம் அபராதம்.
5. அனுமதி பெறாத வாகன ஊர்வலம் நடத்தினால் 500 திர்ஹம் அபராதம், 4 கரும்புள்ளிகள் மற்றும் 15 நாட்களுக்கு வாகன முடக்கம்.
6. அனுமதி பெறாமல் வாகனத்தின் மீது எழுதினால் அல்லது போஸ்டர் ஒட்டினால் 500 திர்ஹம் அபராதம்.
7. பிறருக்கு தொந்தரவு ஏற்படும் வகையில் காருடைய ஹாரன் அல்லது ஸ்டீரியோ சத்தங்களை உயர்த்தினால் 400 திர்ஹம் அபராதம் மற்றும் 4 கரும்புள்ளிகள்.
8. போக்குவரத்து விதிகளை கடைபிடிக்காவிட்டால் 400 திர்ஹம் அபராதம் மற்றும் 4 கரும்புள்ளிகள்.
9. போக்குவரத்திற்கு தடை ஏற்படுத்தினால் 400 திர்ஹம் அபராதம்.
10. வாகனத்திலிருந்து குப்பைகளை வெளியே எறிந்தால் 1,000 திர்ஹம் அபராதம் மற்றும் 6 கரும்புள்ளிகள்.
11. வேண்டுமென்றே நம்பர் பிளேட்டை மறைத்துச் சென்றால் 400 திர்ஹம் அபராதம்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.