.

Pages

Tuesday, November 28, 2017

அதிராம்பட்டினம் தனலட்சுமி வங்கி 91 ஆம் ஆண்டு விழா கொண்டாட்டம் (படங்கள்)

அதிராம்பட்டினம், நவ.28
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பழைய போஸ்ட் ஆபிஸ் சாலையில் செயல்படும் தனலட்சுமி வங்கியின் 91 ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் கிளை 35 ஆம் ஆண்டு விழா - வாடிக்கையாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று செவ்வாய்க்கிழமை மாலை வங்கியில் நடைபெற்றது.

விழாவிற்கு வங்கி கிளை மேலாளர் வி. காமாட்சி தலைமை வகித்து வரவேற்றுப் பேசினார். விழாவில், சிறப்பு அழைப்பாளர்களாக மருத்துவர் மீரா சாஹிப், சமூக ஆர்வலர்கள் அக்பர் ஹாஜியார், சைஃபுதீன் ஹாஜியார், கோட்டாகுடி மனோரா பாலிடெக்னிக். கல்லூரி நிர்வாகி  என்.எம் ஜெஹபர் அலி  ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். விழா முடிவில் வங்கி ஊழியர் எஸ்.ஏ அயூப்கான் நன்றி கூறினார்.

இவ்விழாவில் உதவி மேலாளர் டி. சுரேஷ், வங்கி ஊழியர்கள் பி. காதர் பாட்சா, கே. ரம்யா, பி.சண்முகம் மற்றும் வாடிக்கையாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.

செய்தி மற்றும் படங்கள்:
மர்ஜூக் (மாணவச் செய்தியாளர்)
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.