பேராவூரணி நவ.30
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அடுத்த புனல்வாசலில் மின் கம்பி திடீரென அறுந்து விழுந்ததில் 6 ஆடுகள் பலியாகின. ஆடுகளை ஓட்டிச்சென்ற மூதாட்டி அதிர்ஷ்டவசமாக சுதாரித்து கொண்டதால் உயிர் தப்பினார்.
பேராவூரணி, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், மதுக்கூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 3 தினங்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் பேராவூரணியை அடுத்த புனல்வாசல் தெற்குத்தெருவை சேர்ந்த விவசாயி சிமியோன் என்ற சின்னப்பன் (வயது 70) மனைவி சைனிஸ் மேரி (வயது 64) தனக்கு சொந்தமான ஆடுகளை அருகில் இருந்த தென்னந்தோப்பில் மேய்த்துக் கொண்டிருந்தார்.
மழை பெய்யவே மாலை 4.30 மணியளவில் ஆடுகளை ஓட்டிக்கொண்டு வீடு திரும்பினார். அப்போது, புதுப்பட்டினம் 1ம் நம்பர் வாய்க்கால் அருகே தெற்குப்பகுதி வயலின் மேல் செல்லும் உயர் அழுத்த மின் கம்பி திடீரென அறுந்து முன்னாள் சென்று கொண்டிருந்த ஆடுகள் மீது விழுந்துள்ளது. இதில் மூதாட்டி கண் எதிரே மின்சாரம் தாக்கி ஆடுகள் பலியானது. இதில் சுதாரித்து கொண்ட சைனிஸ் மேரி அதிர்ஷ்டவசமாக மயிரிழையில் உயிர் தப்பினார்.
இச்சம்பவம் குறித்து வருவாய்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. மேலும் சிமியோன் என்ற சின்னப்பன் மகன் ஜெரோம் திருச்சிற்றம்பலம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இறந்து போன ஆடுகளின் மதிப்பு சுமார் ரூ 40 ஆயிரம் இருக்கும் எனக்கூறப்படுகிறது.
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அடுத்த புனல்வாசலில் மின் கம்பி திடீரென அறுந்து விழுந்ததில் 6 ஆடுகள் பலியாகின. ஆடுகளை ஓட்டிச்சென்ற மூதாட்டி அதிர்ஷ்டவசமாக சுதாரித்து கொண்டதால் உயிர் தப்பினார்.
பேராவூரணி, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், மதுக்கூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 3 தினங்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் பேராவூரணியை அடுத்த புனல்வாசல் தெற்குத்தெருவை சேர்ந்த விவசாயி சிமியோன் என்ற சின்னப்பன் (வயது 70) மனைவி சைனிஸ் மேரி (வயது 64) தனக்கு சொந்தமான ஆடுகளை அருகில் இருந்த தென்னந்தோப்பில் மேய்த்துக் கொண்டிருந்தார்.
மழை பெய்யவே மாலை 4.30 மணியளவில் ஆடுகளை ஓட்டிக்கொண்டு வீடு திரும்பினார். அப்போது, புதுப்பட்டினம் 1ம் நம்பர் வாய்க்கால் அருகே தெற்குப்பகுதி வயலின் மேல் செல்லும் உயர் அழுத்த மின் கம்பி திடீரென அறுந்து முன்னாள் சென்று கொண்டிருந்த ஆடுகள் மீது விழுந்துள்ளது. இதில் மூதாட்டி கண் எதிரே மின்சாரம் தாக்கி ஆடுகள் பலியானது. இதில் சுதாரித்து கொண்ட சைனிஸ் மேரி அதிர்ஷ்டவசமாக மயிரிழையில் உயிர் தப்பினார்.
இச்சம்பவம் குறித்து வருவாய்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. மேலும் சிமியோன் என்ற சின்னப்பன் மகன் ஜெரோம் திருச்சிற்றம்பலம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இறந்து போன ஆடுகளின் மதிப்பு சுமார் ரூ 40 ஆயிரம் இருக்கும் எனக்கூறப்படுகிறது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.