அதிராம்பட்டினம், நவ.28
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை உள்ளடக்கிய காந்தி நகர், கரையூர் தெரு, ஏரிப்புறக்கரை, மறவக்காடு, கீழத்தோட்டம் ஆகிய பகுதிகளில் மீன்பிடி துறைமுகங்கள் உள்ளன. இங்குள்ள மீனவர்கள் தொழிலாக படகுகளில் கடலுக்குச் சென்று மீன்பிடித்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த 2 நாட்களாக அதிரை கடலோரப்பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் மீனவர்களின் வலைகளில் தாளன் சுறா மீன்கள் அதிகளவில் பிடிபடுவதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து கடைத்தெரு மீன் வியாபாரி முகைதீன் கூறியது;
'அதிராம்பட்டினம் கடலோரப்பகுதியில் இடைவெளி விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் அதிக எண்ணிக்கையிலான தாளன் சுறா மீன்கள் கடைத்தெரு மீன் மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு வருகின்றன. மிகவும் சுவையாக இருக்கும் என்பதால் இம்மீனை இப்பகுதியினர் விரும்பி வாங்கிச்செல்கின்றனர். சுமார் 500 முதல் 700 கிராம் வரை எடை கொண்ட ஒரு தாளன் சுறா மீன் ரூ. 50 லிருந்து ரூ. 70 வரை விற்பனையாகிறது' என்றார்.
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை உள்ளடக்கிய காந்தி நகர், கரையூர் தெரு, ஏரிப்புறக்கரை, மறவக்காடு, கீழத்தோட்டம் ஆகிய பகுதிகளில் மீன்பிடி துறைமுகங்கள் உள்ளன. இங்குள்ள மீனவர்கள் தொழிலாக படகுகளில் கடலுக்குச் சென்று மீன்பிடித்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த 2 நாட்களாக அதிரை கடலோரப்பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் மீனவர்களின் வலைகளில் தாளன் சுறா மீன்கள் அதிகளவில் பிடிபடுவதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து கடைத்தெரு மீன் வியாபாரி முகைதீன் கூறியது;
'அதிராம்பட்டினம் கடலோரப்பகுதியில் இடைவெளி விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் அதிக எண்ணிக்கையிலான தாளன் சுறா மீன்கள் கடைத்தெரு மீன் மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு வருகின்றன. மிகவும் சுவையாக இருக்கும் என்பதால் இம்மீனை இப்பகுதியினர் விரும்பி வாங்கிச்செல்கின்றனர். சுமார் 500 முதல் 700 கிராம் வரை எடை கொண்ட ஒரு தாளன் சுறா மீன் ரூ. 50 லிருந்து ரூ. 70 வரை விற்பனையாகிறது' என்றார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.