.

Pages

Sunday, November 26, 2017

அதிராம்பட்டினம் ரயில் நிலைய கட்டுமானம் ~ தண்டவாளம் அமைக்கும் பணி தீவிரம் (படங்கள்)

அதிராம்பட்டினம், நவ.26
காரைக்குடி - திருவாரூர் இடையேயான, 147 கி.மீ., துார மீட்டர் கேஜ் பாதை, ரூ. 711 கோடி செலவில், அகல ரயில் பாதையாக மாற்றியமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக, தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் ரயில் நிலையம் சுமார் ரூ. 3.5 கோடி மதிப்பீட்டில் கட்டுமானப்பணி கடந்த ஜூலை 3 ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. சுமார் ரூ. 3.5 கோடி மதிப்பீட்டில், 65 மீட்டர் நீளத்தில் ரயில் நிலையம், 420 மீட்டர் நீளத்தில் நடைமேடை மற்றும் வாகனங்கள் நிறுத்துமிடம், கழிப்பறை கட்டிடம், டிக்கெட் கூடம், பயணியர் ஓய்வு அறை என பயணிகளுக்கு தேவையான அனைத்து வசதிகள் ஒருங்கிணைந்த நிலையம் அமைய இருப்பதாக ரயில்வே அலுவலகத்  தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதில், தற்போது 420 மீட்டர் நீளத்தில் நடைமேடை கட்டுமானப்பணி நடைபெற்று வருகிறது. இப்பணிக்காக நிலையத்தின் வடக்குப் பகுதியில் தடுப்புச் சுவர் எழுப்பப்பட்டு வருகிறது. ரயில்நிலைய நடை மேடை ஏறக்குறைய 10 அடி உயரத்தில் கட்டப்பட்டு வருகிறது.

இது ஒருபுறமிருக்க, மறுபுறம் பட்டுக்கோட்டை - அதிராம்பட்டினம் இடையே உள்ள இரயில்வே பாதையில் தண்டவாளங்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இப்பணிக்காக ஸ்லீப்பர் கட்டைகள் டிப்பர் லாரிகளில் கொண்டுவரப்பட்டு ஜெ.சி.பி இயந்திரம் உதவியோடு இரயில்வே பாதைகளில் அடுக்கி வைக்கப்படுகின்றன. பட்டுக்கோட்டை ரயில் நிலையம் முதல் மாளியாக்காடு ஊராட்சி பகுதி வரையிலான ரயில் பாதையில் தண்டவாளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதிராம்பட்டினம் பகுதி வரையிலான பணிகள் இன்னும் சில வாரங்களில் முழுமை பெரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

செய்தி மற்றும் படங்கள்:
மர்ஜூக், அஜீம் (மாணவச் செய்தியாளர்கள்)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


2 comments:

  1. சுட சுட சூடான படங்கள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. தொடர்ந்து அதிரையின் ரயில்வே வேலையின் தினசரி நடப்புகளை/தகவல்களை அதிரை நியூஸ் தந்து வருகிறது,நன்றி.இனிமேலும் ரயில்வே சம்மந்தப்பட்ட தகவல்களை தவறாமல் பதிவிடவும். தண்டவாளம் பதிக்கும் இடத்தையும் வீடியோ எடுத்து பதிவிட்டால் நல்லது

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.