.

Pages

Tuesday, November 28, 2017

டெல்லியில் கன்னத்தில் அறைந்து கொண்ட பயணியும், விமான நிறுவன மேனேஜரும்

அதிரை நியூஸ்: நவ.28
டெல்லியில் இன்று காலை இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் டெர்மினல் 3 பகுதிக்கு அஹமதாபாத் செல்வதற்காக பெண் பயணி ஒருவர் வந்தார் எனினும் அவர் தாமதமாக வந்ததாக கூறி ஏர் இந்தியா விமானத்தில் பறக்க அனுமதி மறுக்கப்பட்டார்.

பயணி ஏர் இந்தியாவின் டூட்டி மேனேஜரிடம் கொண்டு செல்லப்பட்டார், அங்கும் அவர் விமான நிறுவன சட்டங்களை காரணம் காட்டி அனுமதி மறுக்கப்பட்டதை தொடர்ந்து இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதன் விளைவாக பயணி முதலில் அந்தப் பெண் மேனேஜர் கன்னத்தில் அறைய, மேனேஜர் திருப்பி அறைய என அடித்து விளையாடி அசிங்கப்பட்டனர்.

பெண் பயணி போலீஸாரிடம் புகார் கொடுத்ததை தொடர்ந்து இருவரும் ஒருவருக்கொருவர் மன்னிப்பு கேட்டு பிரச்சனையை அமைதியாக அத்துடன் முடித்துக் கொண்டனர் என டெல்லி விமான நிலைய DCP சஞ்சய் பாட்டியா தெரிவித்தார்.

அதெல்லாம் சரி, ரூல்ஸ் பயணிகளுக்கு மட்டும் தானா? அரசியல்வாதிகளுக்காக விமானங்கள் பல மணிநேரம் காத்திருக்கும் சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறுகிறதே அது என்ன கணக்கு?

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.