.

Pages

Thursday, November 23, 2017

நீரா பானம் தயாரிக்க அனுமதி அளிக்க கோரிக்கை!

பேராவூரணி நவ.23
தென்னை விவசாயிகள் பயன்பெறும் வகையில், அறிவித்தபடி நீரா பானம் தயாரிக்க அனுமதி அளிக்கவும், பயிற்சி அளிக்கவும், விற்பனை செய்யவும் தமிழக அரசு உரிய ஏற்பாடுகளை செய்யவேண்டும் என
சேதுபாவாசத்திரம் ஒன்றிய மாநாட்டில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 12 ஆவது ஒன்றிய மாநாடு புதன்கிழமை அன்று ரெட்டவயல் கே.எம்.டி திருமண மண்டபம் மக்கள் எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி நினைவரங்கில் நடைபெற்றது.

மாவட்டக்குழு உறுப்பினர் வீ.கருப்பையா, ஆ.முருகையன்  மாநாட்டிற்கு தலைமை வகித்தனர். ஒன்றியக்குழு உறுப்பினர் பி.பெரியண்ணன் வரவேற்றார். ஒன்றியச்செயலாளர் ஆர்.எஸ்.வேலுச்சாமி வேலையறிக்கை, வரவு-செலவு அறிக்கை தாக்கல் செய்தார். ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கே.குத்புதீன், பி.பெரியண்ணன் மற்றும் ஆர்.எம்.வீரப்பெருமாள் தீர்மானங்களை முன்மொழிந்து பேசினர். முன்னதாக  மாநிலக்குழு உறுப்பினர் ஜி.நீலமேகம் மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார்.
மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.மாலதி வாழ்த்திப் பேசினார்.
நிறைவாக மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.சி.பழனிவேலு மாநாட்டு நிறைவுரையாற்றினார்.

இம்மாநாட்டில்  ஒன்றியச் செயலாளராக ஆர்.எஸ்.வேலுச்சாமி மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். மேலும் ஒன்றியக்குழு உறுப்பினர்களாக வீ.கருப்பையா, பி.பெரியண்ணன், கே.குத்புதீன், ஏ.வெங்கடாசலம், ஆ.இளங்கோ, ஏ.சையது முகமது, எம்.வேலுச்சாமி ஆகியோர்  தேர்வு செய்யப்பட்டனர்.

தீர்மானங்கள்: 
இம்மாநாட்டில், ' தென்னை விவசாயிகள் பயன்பெறும் வகையில், தமிழக அரசு ஏற்கனவே  அறிவித்தபடி நீரா பானம் உற்பத்திக்கு  அனுமதி அளிக்கவும், மதிப்புக்கூட்டப்பட்ட நீரா பானம் தயாரிக்க பயிற்சி அளிக்கவும், விற்பனை செய்யவும் தமிழக அரசு உரிய ஏற்பாடுகளை செய்யவேண்டும்.

கடைமடைப் பகுதிகளுக்கு முறைவைக்காமல் தண்ணீர் விடவும், ஏரி, குளங்களை நிரப்பித்தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பேராவூரணி அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும்.

மல்லிப்பட்டினம் துறைமுக சாலையை அமைத்து தரவேண்டும்.

தேங்காய் கொப்பரை விலையை ரூ 61 லிருந்து 122 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும். கேரள கூட்டுறவு சங்கங்களில் உள்ளது போல உரித்த தேங்காய் கிலோ ரூ 41 என அரசே கொள்முதல் செய்யவேண்டும்.

பள்ளி, கல்லூரி செல்லும் நேரங்களில் பேருந்துகளை இயக்க வேண்டும். நிறுத்தப்பட்ட வழித்தடங்களில் பேருந்துகளை இயக்க வேண்டும்.

தனிநபர் கழிப்பறை கட்ட அரசு வழங்கும் தொகை ரூ 12 ஆயிரத்திற்கு பதிலாக ரூ 36 ஆயிரம் வழங்க வேண்டும்' என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

முன்னதாக ரெட்டவயல் கடைவீதியில் இருந்து மாநாட்டு மண்டபம் வரை நூற்றுக்கும் மேற்பட்ட கட்சியினர் ஊர்வலமாக சென்றனர். மாவட்ட குழு உறுப்பினர் வீ.கருப்பையா மாநாட்டு கொடியேற்றி வைத்தார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.