அதிரை நியூஸ்: நவ.28
துபையிலிருந்து மும்பை வந்த பயணிகளை கதறவிட்ட ஏர் இந்தியா நிறுவனம்
தெண்டச் சம்பள ஊழியர்களுக்கு அடையாளமாக யாரையாவது முன்னுதாரணமாக நிறுத்த வேண்டியிருந்தால் தாராளமாக ஏர் இந்தியா ஊழியர்களை முன்னிறுத்தலாம் என்று சொல்லுமளவிற்கு உச்சி முதல் பாதம் வரை உருப்படாத விமான நிர்வாகத்தை செய்பவர்கள் ஆனால் தங்களின் சுய தேவைகளுக்கு மட்டும் கொடி பிடிக்க, வேலைநிறுத்தம் செய்ய வெட்கப்படாதவர்கள்.
நேற்றிரவு துபையிலிருந்து புறப்பட்ட ஏர் இந்திய விமானம் அதன் மரபணு கட்டளைக்கு ஏற்ப சுமார் 1.30 மணிநேரம் தாமதமாக மும்பை புறப்பட்டுச் சென்றது. இந்த கால தாமதத்தின் போது ஏற்கனவே ஏற்றப்பட்டிருந்த பயணப்பொதிகள் பலவற்றை மறுபடியும் கீழே இறக்கியதை பல பயணிகள் பார்த்துள்ளனர் என்றாலும் விமானி எரிபொருள் பிரச்சனையின் (Some Fueling issue) காரணமாக தாமதமாவதாக அறிவித்துள்ளார். விமானம் துபையில் தாமதமான போது உள்ளிருந்த பயணிகளுக்கு தண்ணீரைக் கூட பலருக்கு தரவில்லை, கிடைத்த மிகச்சிலர் அன்றைய அதிர்ஷ்டஷாலிகள்.
மும்பை வந்திறங்கி பெல்ட்டில் (Concourse) காத்திருந்தபோது தான் தெரிந்தது சுமார் 50 பயணிகளின் பயண உடைமைகளை துபையிலேயே இறக்கி வைத்துவிட்டு அதைப் பற்றி எதையுமே பயணிகளுக்கு முறைப்படி அறிவிக்காமல் அழைத்து வந்த கள்ளத்தனம்.
ஏர் இந்தியாவின் இந்த சிறப்பான பணியால் ஒரு தம்பதி மும்பையிலிருந்து ஜெய்ப்பூர் செல்ல வேண்டிய விமானத்தை தவறவிட்டுள்ளனர். தனது திருமணத்திற்கான ஆடைகள் மற்றும் பொருட்களுடன் சென்ற ஒரு மணப்பெண்ணும் தவித்துப் போனார். இப்படி ஒவ்வொரு பயணியின் பின்னும் ஒரு சோக வடுவை ஏற்படுத்தியது ஏர் இந்தியா.
மேலும், தாமதமாக புறப்பட்ட போதும் தண்ணீர் தராதவர்கள் விமானம் தரையிறங்கிய பின் பெல்ட்டில் பல மணிநேரம் உடமைகளுக்காக காத்திருந்தபோதும் தண்ணீரையோ, சிற்றுண்டிகளையோ ஏற்பாடு செய்து தர ஏர் இந்திய நிர்வாகத்தினர் யாரும் முன்வரவில்லை.
பயணிகளுக்கு முறைப்படி அறிவித்துவிட்டே பயணப்பொதிகளை இறக்கினோம் என்று திருவாய் மலர்ந்த ஏர் இந்திய அதிகாரி ஒருவர், இறக்கப்பட்ட உடமைகள் ஜெட் ஏர்வேஸ், இன்டிகோ விமானங்களில் ஏற்றப்பட்டு விட்டதாகவும் எஞ்சியவை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் கொண்டு வரப்படும் என்றும் சொன்னவர், இறுதியாக இவை எங்களின் கைகளை மீறிச் சென்ற விஷயம் என பொறுப்பான பதிலை கூறி அசத்தினார்.
தனியார் மயப்படுத்தலை நியாயப்படுத்த எத்தனை உத்திகள்?
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
துபையிலிருந்து மும்பை வந்த பயணிகளை கதறவிட்ட ஏர் இந்தியா நிறுவனம்
தெண்டச் சம்பள ஊழியர்களுக்கு அடையாளமாக யாரையாவது முன்னுதாரணமாக நிறுத்த வேண்டியிருந்தால் தாராளமாக ஏர் இந்தியா ஊழியர்களை முன்னிறுத்தலாம் என்று சொல்லுமளவிற்கு உச்சி முதல் பாதம் வரை உருப்படாத விமான நிர்வாகத்தை செய்பவர்கள் ஆனால் தங்களின் சுய தேவைகளுக்கு மட்டும் கொடி பிடிக்க, வேலைநிறுத்தம் செய்ய வெட்கப்படாதவர்கள்.
நேற்றிரவு துபையிலிருந்து புறப்பட்ட ஏர் இந்திய விமானம் அதன் மரபணு கட்டளைக்கு ஏற்ப சுமார் 1.30 மணிநேரம் தாமதமாக மும்பை புறப்பட்டுச் சென்றது. இந்த கால தாமதத்தின் போது ஏற்கனவே ஏற்றப்பட்டிருந்த பயணப்பொதிகள் பலவற்றை மறுபடியும் கீழே இறக்கியதை பல பயணிகள் பார்த்துள்ளனர் என்றாலும் விமானி எரிபொருள் பிரச்சனையின் (Some Fueling issue) காரணமாக தாமதமாவதாக அறிவித்துள்ளார். விமானம் துபையில் தாமதமான போது உள்ளிருந்த பயணிகளுக்கு தண்ணீரைக் கூட பலருக்கு தரவில்லை, கிடைத்த மிகச்சிலர் அன்றைய அதிர்ஷ்டஷாலிகள்.
மும்பை வந்திறங்கி பெல்ட்டில் (Concourse) காத்திருந்தபோது தான் தெரிந்தது சுமார் 50 பயணிகளின் பயண உடைமைகளை துபையிலேயே இறக்கி வைத்துவிட்டு அதைப் பற்றி எதையுமே பயணிகளுக்கு முறைப்படி அறிவிக்காமல் அழைத்து வந்த கள்ளத்தனம்.
ஏர் இந்தியாவின் இந்த சிறப்பான பணியால் ஒரு தம்பதி மும்பையிலிருந்து ஜெய்ப்பூர் செல்ல வேண்டிய விமானத்தை தவறவிட்டுள்ளனர். தனது திருமணத்திற்கான ஆடைகள் மற்றும் பொருட்களுடன் சென்ற ஒரு மணப்பெண்ணும் தவித்துப் போனார். இப்படி ஒவ்வொரு பயணியின் பின்னும் ஒரு சோக வடுவை ஏற்படுத்தியது ஏர் இந்தியா.
மேலும், தாமதமாக புறப்பட்ட போதும் தண்ணீர் தராதவர்கள் விமானம் தரையிறங்கிய பின் பெல்ட்டில் பல மணிநேரம் உடமைகளுக்காக காத்திருந்தபோதும் தண்ணீரையோ, சிற்றுண்டிகளையோ ஏற்பாடு செய்து தர ஏர் இந்திய நிர்வாகத்தினர் யாரும் முன்வரவில்லை.
பயணிகளுக்கு முறைப்படி அறிவித்துவிட்டே பயணப்பொதிகளை இறக்கினோம் என்று திருவாய் மலர்ந்த ஏர் இந்திய அதிகாரி ஒருவர், இறக்கப்பட்ட உடமைகள் ஜெட் ஏர்வேஸ், இன்டிகோ விமானங்களில் ஏற்றப்பட்டு விட்டதாகவும் எஞ்சியவை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் கொண்டு வரப்படும் என்றும் சொன்னவர், இறுதியாக இவை எங்களின் கைகளை மீறிச் சென்ற விஷயம் என பொறுப்பான பதிலை கூறி அசத்தினார்.
தனியார் மயப்படுத்தலை நியாயப்படுத்த எத்தனை உத்திகள்?
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.