.

Pages

Thursday, November 23, 2017

ஜித்தா வெள்ளத்தில் சிக்கிய சவுதி முதியவரை காப்பாற்றிய ஓட்டுனருக்கு குவியும் பாராட்டு!

அதிரை நியூஸ்: நவ.23
சவுதி அரேபியா, ஜித்தா வெள்ளத்தில் சிக்கிய சவுதி முதியவரை காப்பாற்றிய பிலிப்பைனி டிரைவரருக்கு குவியும் பாராட்டு.

ஜித்தாவில் ஒரு வீட்டில் டிரைவராக பணியாற்றிவரும் தாவூது பலின்தோங் என்ற 37 வயது வீட்டு டிரைவர் காரினுள் வெள்ளத்தில் சிக்கி முழ்கிக் கொண்டிருந்த முதிய சவுதி ஒருவரை துணிச்சலுடன் காப்பாற்றிய செயல் பலரது பாராட்டையும் பெற்றுத் தந்துள்ளது.

ஜித்தாவின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள அப்ருக் அல் ரிகாமா என்ற பகுதியில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் முதிய சவுதி ஒருவர் காருடன் சிக்கி முழ்கிக் கொண்டிருந்தார். இச்சம்பவத்தை பார்த்துக் கொண்டிருந்த தாவூது பலின்தோங் உடனடியாக நீந்திச் சென்று அம்முதியவரை காப்பாற்றிக் கரை சேர்த்தார்.

தாவூது காப்பாற்றச் செல்லும் போது பலர் போக வேண்டாம் என தடுத்துள்ளனர், இன்னும் சிலர் சிவில் டிபன்ஸ் (தீயணைப்புத்துறை) வந்து காப்பாற்றும் எனக்கூறியுள்ளனர். இன்னும் சிலர் பொறுப்புடன் இச்சம்பவத்தை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொண்டுள்ளனர் ஆனால் இதில் எதையுமே கவனத்தில் கொள்ளாத தாவூது தனது கடமையை செய்தார். மேலும், என்னுடைய மனிதாபிமான கடமையை செய்தேன் இதற்காக நான் பாராட்டப்படுவதை விரும்பவில்லை என பொட்டிலடித்தாற் போல் கூறினார்.

இவ்வளவு சம்பவங்கள் நடைபெற்ற நிலையில் அங்கிருந்த 2 தீயணைப்புத் துறை ஊழியர்கள் இருவர் பிறரைப் போல் இச்சம்பவத்தை வேடிக்கை மட்டுமே பார்த்துள்ளனர். அவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கைகள் பாய்ந்துள்ளது.

Source: Saudi Gazette / Msn
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.