.

Pages

Thursday, November 30, 2017

அதிராம்பட்டினத்தில் 41.20 மி.மீ மழை பதிவு !

அதிராம்பட்டினம், நவ.30
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில், கடந்த சில நாட்களாக இடைவெளி விட்டு அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று புதன்கிழமை இரவு முதல் இன்று வியாழக்கிழமை மாலை வரை அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்தது. மேலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று (நவ.30) வியாழக்கிழமை காலை 8.30 மணி நேர நிலவரப்படி அதிராம்பட்டினத்தில் 27.60 மி.மீ, மாலை 5.30 மணி நேர நிலவரப்படி 13.60 மி.மீ மழை பதிவாகியது.

தஞ்சை மாவட்டத்தில் அதிகபட்சமாக வல்லத்தில் 70 மி.மீ (காலை), கும்பகோணத்தில் 35 மி.மீ (மாலை), பட்டுக்கோட்டையில் 31.80 மி.மீ(காலை), 1.60 மி.மீ (மாலை), பேராவூரணியில் 13.20 மி.மீ (காலை), 2 மி.மீ (மாலை), மதுக்கூரில் 16.40 மி.மீ (காலை), 1.80 மி.மீ (மாலை) மழை பதிவாகியது.

2 comments:

  1. மழை அளவு பற்றிய செய்திகளில் பொதுவாகவே "இன்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில்" என்ற வாசகம் வானியல் ஆய்வுமைய அறிக்கைகளிலும், வெகுஜன ஊடகங்களிலும் இருக்கும். இதன் மூலம் செய்தியில் வந்திருக்கும் மழையின் அளவு முதல் நாள் காலை 8.30மணி முதல் அடுத்த நாள் காலை 8.30 மணிவரை என குழப்பமின்றி எளிதாக புரிய இயலும்.

    ஆனால், உங்களுடைய மழை அளவு செய்திகளில் இந்த தெளிவு இல்லை. குறிப்பாக மாலையில் பதிவான மழை அளவு 24 மணி நேரத்திற்குரியதா? அல்லது காலையிலிருந்து மாலை வரை உள்ள 9 மணி நேரத்திற்குரியதா என்ற குழப்பம் வருகிறது.

    வரக்கூடிய காலங்களில் இந்த தெளிவுடன் மழை அளவு செய்திகள் இருக்கும் என எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. கருத்துக்கு நன்றி சகோ. !

      மாவட்ட வானிலை அறிவிப்பில் மழை நிலவரங்கள் குறித்து காலை 8 மணி நேர நிலவரம் மற்றும் மாலை 4.30 மணி நேர நிலவரங்களை தளத்தில் பதிந்து வருகிறோம்....

      இப்பதிவில் காலை மற்றும் மாலை மழை நிலவரங்களை இணைத்து வெளியிட்டுள்ளோம். உதாரணமாக, (நவ.30) வியாழக்கிழமை காலை 8.30 மணி நேர நிலவரப்படி அதிராம்பட்டினத்தில் 27.60 மி.மீ, மாலை 5.30 மணி நேர நிலவரப்படி 13.60 மி.மீ மழை பதிவாகியது. அதாவது மொத்தம் 41.20 மி.மீ பதிவு என தலைப்பில் குறிப்பிட்டுள்ளோம். அதன்படி, அதிராம்பட்டினம் சுற்றுப்புறப் பகுதிகளின் மழை நிலவரங்களையும் கூடுதலாக பதிவில் குறிப்பிட்டுளோம். நன்றி

      Delete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.