தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் ஈசிஆர் சாலை காதிர் முகைதீன் கல்லூரி எதிரே அமைந்துள்ள ஆதம் நகர் ~ எம்.எஸ்.எம் நகர் நுழைவாயில் அருகே புதிதாக 'ஸ்கை கேர் கிளினிக்' என்ற பெயரில் பொதுநல மருத்துவச் சேவை இன்று புதன்கிழமை காலை முதல் தொடங்கியது.
நிகழ்ச்சிக்கு பட்டுக்கோட்டை பிரபல மருத்துவர் டி.ஏ.கே. ரத்தினம் பிள்ளை தலைமை வகித்து,, மருத்துவமனையை திறந்து வைத்து வாழ்த்திப்பேசினார்.
இதுகுறித்து மருத்துவர் டி.ஏ.கே. ரத்தினம் பிள்ளை பேரனும், ஸ்கை கேர் மருத்துவமனை மருத்துவர் எஸ். சந்துரூ எம்.டி கூறியது;
பட்டுக்கோட்டையில் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவ சேவையில் ஈடுபட்டுவரும் பிரபல மருத்துவர் டி.ஏ.கே. ரத்தினம் பிள்ளை. எனது தாதாவான இவர் பொதுமக்களின் நன்மதிப்பை பெற்றவர். பட்டுக்கோட்டை மற்றும் சுற்றுப்புற பகுதி பொதுமக்களுக்கு ரூ.10 கட்டணத்தில் மருத்துவச்சேவை ஆற்றி வருகிறார். இவரது வழிகாட்டுதல் பேரில் எனது மருத்துவ சேவையை அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற கிராமப் பகுதி பொதுமக்களுக்கு வழங்க உள்ளேன். இம்மருத்துவமனையில் மருத்துவத்தில் அனுபவமிக்க மருத்துவர்களால் பொதுநலம் சம்பந்தப்பட்ட அனைத்து வகை மருத்துவ ஆலோசனைகள், பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். இப்பகுதி பொதுமக்கள் இச்சேவையை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். என்றார்.
இந்நிகழ்ச்சியில், மருத்துவர் டி.ஏ.கே. ரத்தினம் பிள்ளை குடும்பத்தினர், நண்பர்கள், அதிரை பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு வாழ்த்தினர்.
வாழ்த்துகள்...
ReplyDelete