அதிராம்பட்டினத்தில் புதியதோர் உதயமாக 'அல் கரீம் பீஃப் ஸ்டால்' என்ற பெயரில் மாட்டு இறைச்சிக் கடை செடியங்குளம் அருகில் வெள்ளிக்கிழமை காலை முதல் உதயமாகியது. திறப்பு நாளன்று கூட்ட நெருக்கடி அதிகமாக காணப்பட்டன. விலை மலிவு என்பதால் பொதுமக்கள் ஆர்வமாக வாங்கிச்சென்றனர். விற்பனை தொடங்கிய சில மணி நேரங்களில் இறைச்சி அனைத்தும் விற்று தீர்ந்தது.
இதுகுறித்து நிறுவன உரிமையாளர் 'கிங்காங்' அப்துல் கரீம் கூறியது:
ஆரோக்கியமான மாடுகளை நேரடியாக கொள்முதல் செய்து அவற்றை மக்கள் பார்வையில் படும்படி காற்றோட்டமான பகுதியில் மேய விட்டு, ஹலாலான முறையில் சுத்தப்படுத்தி விற்பனை செய்கிறோம். இங்கு மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்பனை உண்டு. டெலிபோனில் ஆர்டர் செய்தால் இலவச டோர் டெலிவரி வசதி உண்டு' என்றார்.
Congrats
ReplyDeleteMasha Allah
ReplyDeleteMasha Allah
ReplyDelete