அதிராம்பட்டினம், பிப்.11
மனிதநேய மக்கள் கட்சியின் 11-வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி அதிராம்பட்டினத்தில் 12 இடங்களில் கட்சி கொடியேற்றும் நிகழ்வு திங்கட்கிழமை நடைபெற்றது.
நிகழ்சிக்கு அக்கட்சியின் அதிராம்பட்டினம் பேரூர் தலைவர் எம்.சாகுல் ஹமீது தலைமை வகித்தார். அக்கட்சியின், தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் அதிரை எஸ். அகமது ஹாஜா, அக்கட்சியின் அதிரை பேரூர் செயலர் எஸ்.ஏ இத்ரீஸ் அகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்வில், அக்கட்சியின் கடைத்தெரு அலுவலகம், அதிராம்பட்டினம் பேருந்து நிலையம், பழைய போஸ்ட் ஆபீஸ் சாலை, தக்வா பள்ளிவாசல், சேர்மன் வாடி, வண்டிப்பேட்டை, ஷிஃபா மருத்துவமனை, பிலால் நகர், கல்லூரி முக்கம் உள்ளிட்ட 12 இடங்களில் கட்சி கொடி ஏற்றி வைக்கப்பட்டன. முடிவில் மமக பொருளாளர் முகமது யூசுப் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில், மமக நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.
மனிதநேய மக்கள் கட்சியின் 11-வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி அதிராம்பட்டினத்தில் 12 இடங்களில் கட்சி கொடியேற்றும் நிகழ்வு திங்கட்கிழமை நடைபெற்றது.
நிகழ்சிக்கு அக்கட்சியின் அதிராம்பட்டினம் பேரூர் தலைவர் எம்.சாகுல் ஹமீது தலைமை வகித்தார். அக்கட்சியின், தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் அதிரை எஸ். அகமது ஹாஜா, அக்கட்சியின் அதிரை பேரூர் செயலர் எஸ்.ஏ இத்ரீஸ் அகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்வில், அக்கட்சியின் கடைத்தெரு அலுவலகம், அதிராம்பட்டினம் பேருந்து நிலையம், பழைய போஸ்ட் ஆபீஸ் சாலை, தக்வா பள்ளிவாசல், சேர்மன் வாடி, வண்டிப்பேட்டை, ஷிஃபா மருத்துவமனை, பிலால் நகர், கல்லூரி முக்கம் உள்ளிட்ட 12 இடங்களில் கட்சி கொடி ஏற்றி வைக்கப்பட்டன. முடிவில் மமக பொருளாளர் முகமது யூசுப் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில், மமக நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.