.

Pages

Monday, February 25, 2019

கஜா பேரிடர் மீட்பு பணி: கடற்கரைத்தெரு ஜமாத் சார்பில் விருந்தினர்கள் கெளரவிப்பு (படங்கள்)

அதிராம்பட்டினம், பிப்.25
அதிராம்பட்டினம் கடற்கரை ஜும்ஆ மஸ்ஜித் மஹல்லா நிர்வாகக் கமிட்டி சார்பில், கடந்த ஆண்டு வீசிய கஜா புயலில் பெரிதும் பாதிப்படைந்த அதிராம்பட்டினம் பகுதியில் தீவிர துப்புரவுப் பணியில் ஈடுபட்ட அதிராம்பட்டினம் பேரூர் நிர்வாகம், மின்சாரம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் துரிதமாக மீட்பு நடவடிக்கைகள் மேற்கொண்ட அதிராம்பட்டினம் மின்சார வாரியம் ஆகியவற்றின் சேவையை பாராட்டி நினைவுப்பரிசு வழங்கும் நிகழ்ச்சி அதிராம்பட்டினம் ரிச்வே கார்டன் ரெஸ்டாரண்ட் கதிஜா மஹாலில் இன்று திங்கட்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியை ஹாஜி தாஜுதீன் ஆலிம் கிராத் ஓதி தொடங்கி வைத்தார். கடற்கரை ஜும்ஆ மஸ்ஜித் மஹல்லா நிர்வாகக் கமிட்டித் தலைவர் எம். அப்துல் ரெஜாக் தலைமை வகித்தார். எஸ்.எம்.ஏ அக்பர் ஹாஜியார் முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினர் தென்னக ரயில்வே சென்னை மண்டல கட்டுமானப்பிரிவு துணை முதன்மை பொறியாளர் சாம்சங் விஜயகுமார் கலந்துகொண்டு பேசியது;
வரும் மார்ச் 25 க்குள் ரயில் போக்குவரத்து சேவை தொடங்கிவிடும். அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது என்றார். பின்னர், கஜா புயலில் மீட்பு பணிகளில் ஈடுபட்ட அதிராம்பட்டினம் மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் பிரகாஷ், அதிராம்பட்டினம் துப்புரவுப் பணி ஆய்வாளர் அன்பரசன், மேற்பார்வையாளர் வெங்கடேசன் ஆகியோருக்கு சால்வை அணிவித்து நினைவுப் பரிசுகளை வழங்கி பாராட்டுத் தெரிவித்தார்.

முன்னதாக, அதிராம்பட்டினம் கடற்கரை ஜும்ஆ மஸ்ஜித் மஹல்லா நிர்வாகக் கமிட்டி ஆலோசகர் ஜமீல் எம். சாலிகு சிறப்புரை வழங்கினார்.

நிகழ்ச்சியில், பட்டுக்கோட்டை ~ திருவாரூர் வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து சேவையை விரைவில் தொடங்க தீவிரமாகப் பணியாற்றி வரும் தென்னக ரயில்வே சென்னை மண்டல கட்டுமானப்பிரிவு துணை முதன்மை பொறியாளர் சாம்சங் விஜயகுமார் மற்றும் அவரது குழுவினருக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக, செயலாளர் எம்.கே முகமது சித்திக் வரவேற்றுப் பேசினார். நிகழ்ச்சிகள் அனைத்தையும் கடற்கரை ஜும்ஆ மஸ்ஜித் மஹல்லா நிர்வாகக் கமிட்டி பொருளாளர் எஸ்.எம் ஹாஜா முகைதீன் தொகுத்து வழங்கினார். முடிவில், தீன் மெடிக்கல்ஸ் எம்.கே சம்சுதீன் நன்றி கூறினார்.

நிகழ்ச்சியில், கடற்கரை ஜும்ஆ மஸ்ஜித் மஹல்லா நிர்வாகக் கமிட்டியினர், அதிராம்பட்டினம் பேரூராட்சி அலுவலகப் பணியாளர்கள், அதிராம்பட்டினம் மின்சார வாரிய பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.