மல்லிப்பட்டினத்தில் அமைந்துள்ள மீன்பிடி துறைமுகத்தினை மீன்வளத்துறை மூலமாக நவீனப்படுத்தி மறு கட்டமைப்பு செய்யும் பணி நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்பகுதியில் கஜா புயலால் சேதமடைந்து படகுகளை இழந்த மீனவர் சங்க பிரதிநிதிகளுடன் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.
கூட்டத்தில் கஜா புயல் தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நிவாரணப் பணிகள் குறித்து மீனவர் சங்க பிரதிநிதிகளின் கோரிக்கையை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு தேவைப்படும் நிவாரண உதவி கிடைத்திட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ளும் என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்;தார்.
மீனவ தொழிலாளர்களுக்கு தற்சமயம் மாற்று வருவாய் ஏற்படுத்த தேவையான உதவிகளை செய்திட மாவட்டம் நிர்வாகம் தயாராக உள்ளது என தெரிவித்த மாவட்ட ஆட்சித் தலைவர் மாடு, கோழி வளர்ப்பு மற்றும் கோழி புறக்கடை அமைத்து மாற்று வருவாய் ஈட்ட தேவையான உதவிகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும் என தெரிவித்தார். மேலும், கஜா புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு வங்கிக் கடன் தடையின்றி அளிப்பது குறித்து வங்கியாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
தொடர்ந்து, சேதுபாவாசத்திரம் பகுதியில் கஜா புயலால் பாதிக்கப்பட்டு அரசு நிவாரணம் பெற்ற மீனவர்கள் தங்களின் படகுகளை சீரமைப்பு செய்வதை மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் பார்வையிட்டார். இந்நிகழ்வின் போது உதவி இயக்குநர் (மீனவளத்துறை) எம்.சிவக்குமார் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.